ஞாயிறு, ஜனவரி 31, 2016

சந்திரஹாசம்

சந்திரஹாசம்-----
ராவணனுக்கு சிவனால் கொடுக்கப்பட்ட வாள். ப்ரம்மாவிடம் பல வரங்கள் பெற்று வரும் வழியில் கைலாசத்தை தூக்க முயற்சிக்க, சிவன் அழுத்த, அவன் ஆயிரம் ஆண்டுகள், சிவ நாமம் சொல்ல அவர் மகிழ்ந்து, இந்த வாளைக் கொடுத்தார். (உத்திர ராம).
ஆனால்சந்திரஹாசன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான் தெரியுமா? 
சந்திரஹாஸன்;-----சுதார்மிகன் என்பவருக்கு இவன் பிறந்தான் . இவன் பிறக்கும் போது கையில் ஆறு விரல்கள் இருந்தன .இது கெடுதல் என்று நாட்டு மக்கள் கூற இவன் தாய் தந்தையரைக் கொன்று, இவனைத் தூக்கி எறிந்தனர்.
பிறகு கௌண்டல நாட்டில் வசித்து வந்தான் . ஒரு நாள் அந்நாட்டு மந்திரி ( த்ரிஷ்டபுத்தி)யின் வீட்டில் ஒரு விருந்து நடக்க அங்கே இச்சிறுவனை கண்ட, சில முனிவர்கள் அவன் பிற்காலத்தில் அரசனாவான் எனக் கூற, இதை அறிந்த மந்திரி பணி ஆட்களிடம் இவனைக் கொல்வதற்கு ஆணையிட , அவர்கள் சந்திரஹாஸனின் ஆறாவது விரலை வெட்டி , விரட்டி விட்டனர்.
அவன் கலிந்த நாட்டை அடைந்தான். அந்நாட்டரசன் இவனின் மேதாவிலாசம் கண்டு, தன்னிடமே வைத்துக் கொண்டு,கல்வி கேள்விகளில் தேர்ந்த பின் அவனை அரசனாக்கினான். இதை அறிந்த த்ருஷ்டபுத்தி கலிந்த நாடு வந்து,இவனை தன் நாட்டரசனைச் சென்று பார்க்குமாறு கூற,அவனும் அதற்கு இசைந்தான். மந்திரி தன் மகனுக்கு (மதனா) ஒரு கடிதம் கொடுத்து இவனை க் கொல்லுமாறு எழுதியிருந்தான்.
ஆனால் வழியில் கௌண்டல நாட்டு இளவரசி சம்பகமாலினியும், த்ருஷ்டபுத்தியின் மகள் விசயாவும் இவனை காதலிக்க, அவர்கள் இவன் கொண்டு வந்த கடிதத்தை பார்க்க நேரிட்டது . பின் , கலங்கி,அதிலிருந்த"விஷம் கொடு" என்பதை மாற்றி"விசயாவை கொடு" என எழுதினர். அவ்வாறே மதனாவும் விசயாவைத் திருமணம் செய்து கொடுக்க, கௌண்டல நாட்டரசனும் தன் பெண் சம்பகமாலினியைக் கொடுத்தான்.
பிறகு த்ருஷ்டபுத்தி சந்திரஹாஸனைக் கொல்வடதற்கு வேறு திட்டமிட்டு , அதை வேறு விதமாகப் புரிந்துகொண்டு மந்திரி மகன் மதனாவைக் கொன்றனர். பிறகு தருமரின் அஸ்வமேதக் குதிரையை நிறுத்த, அர்ச்சுனனுடன் போரிட்டு விரட்ட, கிருஷ்ணன் வந்து சமாதானம் செய்தார். இவனுக்கு மகராக்ஷன், பத்மாக்ஷ்ன் என இரண்டு மகன்கள் இருந்தனர்.(ஜைமினி அஸ்வமேத பர்வ);;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக