ஞாயிறு, நவம்பர் 30, 2014

தினம் ஒரு நெல்லிக்காய் .,,மருத்துவமனைக்கு நோ


அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல், 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை.
''தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்'' என்கிறார் சென்னை அரசு அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவரான கே.வீரபாபு.
''நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான்...'' என்கிறார் டயட்டீஷியன் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து...
1.'காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்’ என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.
3.கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
5.தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.
6.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
7.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
8.நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.
9.நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.
10கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது

உடலில் உள்ள கொழுப்பை கரைக்க உதவும் உணவுகள் :-


உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். சரி இப்போது உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் உணவுகளை பார்க்கலாம்.
• பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.
• ஆப்பிள் உடலில் கொழுப்புச் செல்களை குறைக்க உதவுகிறது. ஆப்பிளின் தோலில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.
• வால் நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இது பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.
• பீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.
* ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.
• க்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.
• தினமும் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.

இயற்கை வாய்ப்புண் டானிக்

 கோவைக்காய் ,கோவை இலை மற்றும் கோவை பூ இவை அனைத்தையும் ஒன்றாக ஓரு ஒருபாத்திரத்தில் எடுத்து அதில் தேவையான நீரை சேர்த்துக்கொள்ளவும் பிறகு அதை நன்றாக கொதிக்கவைக்க வேண்டும், கொதித்த பின் அதை வடிகட்டியால் வடிகட்டி நீரைமட்டும் எடுத்து சேகரித்து கொள்ளுங்கள். சுவைக்காக சிறிது தேனை சேர்த்துக்கொள்ளுங்கள். தேன் இல்லாதபட்சத்தில் சர்கரையை சேர்த்துக்கொள்ளலாம். இப்பொழுது வாய்ப்புண் டானிக் தயார். இதை சித்த வைத்தியத்தில் தீநீர் இறக்குவது என்று கூறுவார்கள்.

இந்த தீநீர் வயிற்றுப்புண் , வாய்ப்புண் மற்றும் அல்சர் குணமாக சிறந்த டானிக்காகும். சில நேரங்களில் மற்ற நோயின் காரணமாக மருந்துகளை சாப்பிடுவதால் அலர்ஜி அல்லது வேறு சில காரணங்களால் நம் வாய் வெந்துபோய்விடும், அந்த சமயங்களிலும் இதை பயன்படுத்தலாம்.
தகவல் ஜீ தமிழ் பாரம்பரிய மருத்துவம்.

மேலே குறிப்பிட்ட தீநீர் செய்ய முடியவில்லை என்றாலும் கவலை இல்லை. கோவைக்காய் வெறும் பச்சையாகவே சாப்பிட்டாலேபோதும் வாய்ப்புண் விரைவில் குணமடையும். கோவை காயை பச்சையாக சாப்பிடுவதா என்று எண்ணவேண்டாம். கோவைக்காய் பச்சையாக சாப்பிட்டால் அசல் வெள்ளரி பிஞ்சு சுவையுடையது.

thanks:
Rajan Jaan
Rajan Jaan

புதன், நவம்பர் 12, 2014

Online work link

This is the link for online part-time job. Use this link and enroll. Be a part of this job and earn money. With you all the best.

இந்த லிங்க் உபயோகப்படுத்தி இந்த வெப்-பேஜில் உறுப்பினர்கள் ஆகி பகுதி நேரத்தில் பணம் சம்பாதியுங்கள். வாழ்த்துக்கள்

வியாழன், நவம்பர் 06, 2014

மனமென ஒன்று உண்டா? :ஆரோக்கியமான விவாதம்


நன்றி : சு.பொ.அகத்தியலிங்கம்

“ உனக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குதாஇல்லையா?” 
“ மனமென ஒன்று உண்டா?”
பார்வைக்கு இரண்டு கேள்விகளும் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றல்ல

முதல் கேள்வி வழக்கமாய் நம்மிடையே நடக்கும் உரை யாடலில் இடம்பெறுவதுஎதிரேஇருப்பவரின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் தன்மையுடையதுஇரண்டாவது கேள்விஅறிவியல் சார்ந்த வினாஇதற்கான விடை தேடல் தத்துவ உலகிற்கு நம்மைஇட்டுச்செல்லும்.

மனச்சாட்சியின் படி நடந்து கொள்வேன் எனஉறுதிமொழி ஏற்பதும்மனச்சாட்சிஉறுத்தவில்லையாஎன குற்றம்சாட்டுவதும் இயல்பாக நடக்கிற ஒன்று.திடீரென “மனம் எனஒன்று இல்லை” என்று யாராவதுசொன்னால் ஏற்பது அவ்வளவு சுலபமல்ல . ஆயின்கருத்துமுதல் வாதத்துக்கு எதிரான போரில் நமது புரிதல் மேம்படவும்கூர்மையடையவும்இதுபோன்ற அலசல்கள் அவசியம்தேவைப்படுகிறது . பாவீரமணி எழுதியுள்ள “ மனமெனஒன்று உண்டா?” என்கிற நூல் “மனம்” குறித்த ஒரு பரந்த விவாதத்திற்குத் தளம்அமைத்துள்ளது . 
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்வெளியிட்டு வரும் மாத இதழான “செந்தமிழ்ச்செல்வியில் ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்துள்ளதுபுலவர் நடேசநாராயணன் “மனம்என்று ஒன்றில்லை” என இரு ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார்அதற்கு தமிழாகரர்தெ.முருகசாமிஎன்பவர் “மனம் என ஒன்று உண்டு” என மறுப்பு எழுதினார்பாவீரமணிஅவரை மறுத்து “மனம் என ஒன்று இல்லை” என பதிலடி கொடுத்தார்.மீண்டும்தெ.முருகசாமி தன் முந்தைய நிலைப்பாட்டை வலியுறுத்தி யும் வீரமணியைமறுத்தும் பதில் எழுதினார்மீண்டும் வீர மணி அதனை மறுத்து “ மனமென ஒன்று இல்லை “என உறுதி செய்தார்இவை அனைத்தின் தொகுப்பாக இந்நூல்வந்துள்ளதுஆக ஒருபக்ககருத்தாக அன்றி இருதரப்பு வாதமாக ஒட்டியும் வெட்டியும் விவாதத் தொகுப்பாகஇந்நூல்வந்துள்ளதுஅதே சமயம் விவாதம் முடிந்ததாகக் கருதக்கூடாதுஇந்நூலைஅடியொற்றி இவ்விவாதம் முன்னெடுக்கப்பட்டால் பயனுள்ள தத்துவ போதனையாகஅமையும் என்பதில் ஐயமில்லை.

 “ உண்மையில் மனம் என்று ஒன்று இல்லை . புலன்களால் பெறும் அறிவுகள்புலன் நரம்புச்செல்களில் மூளை நரம்பு செல்களில்நினைவுகளாகப் பதிந்து விடுகின்றன . இந்தநினைவுகளையே நாம் `மனம்’ எனக் கற்பனை செய்து கொள்கிறோம்மனம் என்பதுஅருவம்நிழல்மனம் என்று எந்த உறுப்பையும் சுட்டிக்காட்ட முடியாதுஆனால்அறிவுக்குஅடையாளம் காட்ட முடியும்ஆம்நமது ஐந்து பொறிகள்தாம் அறிவின் உறுப்புகள்அறிவின்வாயில்கள்” என்று நடேச நாராயணன் விவாதத்தைத் துவங்குகிறார்இது உண்மையைநெருங்க செய்யும் வாதம்ஆயினும் முழு உண்மையாகுமா ?


தெ.முருகசாமி மனம் வேறு மூளை வேறு என வாதிடுகிறார். “மனமோ காட்டலாகப்பொருளாகிய அக உறுப்பு” என்கிறார் . மேலும் மனமே மூளையை ஆட்டுவிப்பதாகக்கூறுமளவுக்குச் சென்றுவிடுகிறார்தொல்காப்பியம்குறள் இவற்றிலிருந்துஎடுத்துக்காட்டுகளோடு வாதிடுகிறார் இவர். “.. தொல்காப்பியர் ‘ மக்கள் தாமே ஆற்றிவுயிரே ’என்பதாகமட்டும் கூறவில்லைஅந்த ஆறாவது அறிவு மனத்தால் அமைவது என்பதாகவேபதிவு செய்துள்ளார்ஆற்றிவதுவேஅவற்றொடு மன்னே’ செய்யுளியல் 27 என்பதால் மனஅறிவு என்றொன்றில்லாமல் இப்படிக் கூறமுடியாதுஇதனால் மனம் என்ற ஒன்றைத்தொல்காப்பியர் கூறினார் எனத் தெளியலாம்” என்கிறார் முருகசாமி.

தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல்அது மொழியின்இலக்கண முறைமையைப் பற்றிப்பேசுவதுஎழுத்தைப் பற்றியோசொல்லைப் பற்றியோ ஒரு முடிவுக்குவருவதற்குஅந்நூலைத் துணை கொள்ளலாம்ஆனால் மனம் என்பதுஉடற்கூற்றியல்அறிவியலைச் (ANATOMY) சார்ந்தது.அதுவும் இப்போது எலும்புகள்வயிறுநுரையீரல்,இதயம்போன்ற உறுப்புகளுக்குத் தனித்தனித் துறை வளர்ந்திருப்பதைப் போன்று மனதைப்பற்றிய உளவியல் [PSYCHOLOGY] துறையும் மூளையோடு தொடர்புடைய நரம்பியல்துறையும்நன்கு வளர்ந்துள்ளனஇக்காலத்தில் மனம் பற்றிய ஒருசரியான முடிவுக்குவரவேண்டுமானால் உளவி யலும் மூளைத் தொடர்புடைய நரம்பியல் துறையும்தாம் நமக்குசரியான வழிகாட்ட முடியும் தொல்காப்பியமோ வேறு இலக்கண நூல்களோ அல்லநாம்எந்தப் பொருளைப் பற்றி ஆராய்ந்தாலும் அதற்குத் திரும்பத் திரும்பத்தொல்காப்பியத்தையும்திருக்குறளையும்மற்ற சமய நூல்களையும் எடுத்துக்காட்டிஅவைகூறும் முடிவுகளே சரியானவை எனச் சாதிக்கிறோம் . இது இக்கால அறிவியல்உலகத்துக்குப் பொருந்தாது” என்கிறார் வீரமணி.

ஆறாவது அறிவு என்பது என்னஇதற்கு “பழக்க அறிவாகும்” என நடேச நாராயணர் கூறும்விளக்கம் போதுமானதல்லஆறாவது அறிவு எது என்பது குறித்த தெளிவுமனம் குறித்தபுரிதலுக்கு அடிப்படையாகத் தெரிய வேண்டும்.இதனை பகுத்தறிவென்பர்அதாவது நன்மைதீமைகளைப்பகுத்துப் பார்க்கும் அறிவென்றே பலரும் சொல்லிவைத்துள்ளனர் .ஆயினும்இதுவும் முழு உண்மையை நெருங்கவில்லை. “கருவிகளை படைக்கும் திறனே” ஆறாவதுஅறி வென மார்க்சும் எங்கெல்சும் வரையரைசெய்ததே சரியான பார்வையாகும்இதனைவீரமணி உள்வாங்கியுள்ளது அவரது வாதத்துக்கு வலு சேர்க்கிறது.

உளவியல் துறையை ஏன் மூளைதுறை என்று கூற வில்லை என்பன போன்ற சிலவாதங்களோடும்அறிவியல் ரீதியாக மூளையின் பாத்திரம் யாதுபுற உலகின் பிரதிபலிப்புத்தான் சிந்தனை என மார்க்ஸ் எவ்வாறு முடிவுக்கு வந்தார் ? சில வேதியல்மருந்துகளின் உதவி கொண்டு மன வியாதிகளைத் தீர்க்க முடிவது எப்படி ? மூளையின்சிறுபகுதியை அறுவை சிகிச்சை செய்துகூட உளவியல் சிக்கல்களுக்கு தீர்வுகாணப்படுகிறதேஎப்படிமூளைதான் அடிப்படை என்பதை இதன் மூலமெல்லாம் அறியமுடியும் எனவாதிடுகிறார் . 
மூளைச்சாவு என்பதையே இப்போது மரணம்என ஏற்றுக்கொள்வதையும் தன் வாதத்திற்குவலுசேர்க்க வீரமணி பயன் படுத்துகிறார். “எண் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்றபழமொழி மெய்யாகிறது வீரமணி வாதத்தில்மூளைகுறித்த பல்வேறு அறிவியல்செய்திகளை விவரிக்கிறார்பெருமூளை , சிறுமூளை குறித்த அறிவியல் செய்திகளைதருகிறார்இதனை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம்அதனைவாழ்க்கையோடுஉரசிப்பார்த்திருக்கிறோமாஎன்பதுதான் கேள்விஅதைத்தான் வீரமணி செய்துள்ளார்

மகிழ்ச்சிகோபம்என பல்வேறு உணர்ச்சிகளை மூளையே உணர்கிறதென்றும் ;அப்போதுஇரத்த ஓட்டமும் இதயத்துடிப்பும் மாறுபடும் ; இதயத்தில் கைவைப்போம் ;இதனால் மனம் இதயத்தோடு சம்பந்தப்பட்டதாகக் கருதிவிட்டோம் என்பதையெல்லாம்வீரமணி பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார் .
அன்பு ,பாசம்இரக்கம் போன்ற நல்லுணர்வுகளும் மூளையின் அறிவுச்சேகரங்களே எனநிறுவுகிறார் . பேய்பிசாசு போன்றவைகற்பனையே எனச் சாடுகிறார் . அறிவியல்பார்வையோடுதான் இவற்றை அணுகவேண்டும் என்கிறார் .

 “ சிற்பியின் மூளையிலோ , பொறியாளரின் மூளையிலோ சிறு சேதமோஊறோஏற்பட்டுவிட்டால் சிற்பியாலோ , பொறியாளராலோ எதனையும் வெளிப்படுத்த இயலாது.அந்நிலையில் மனம் எங்கே போயிற்று ? மனத்தின் பங்குதான் என்ன ? அங்கு சிற்பமும்தோன்றாது ; வீட்டு வரைபடமும் தோன்றாதுஒன்றும் ஏற்படாது என்பதுதான் உண்மை .மூளைதான் எல்லாம் மனம் என ஒன்றில்லை என்பதுதான் அறிவியல் அளிக்கும் விடை.”என முத்தாய்ப்பாகக் கூறிமுடிக்கிறார் வீரமணி .
மனம் என்ற ஒன்று இல்லை என்கிறபோது அதனோடுதொடர்புடைய ஆன்மாகடவுள்போன்ற கருத்தோட்டங்களும் ஆட்டம் காண்கின்றன . மாயாவாதத்துக்குஎதிராகவும் கருத்துமுதல் வாதத்துக்கு எதிராகவும் மார்க்சியத்தை அதாவது இயங்கியல் பொருள் முதல்வாதத்தை முன்வைக் கிறது . இது மிகவும் அடிப்படையானது . ஆகவே இந்நூலை மிகநுட்பமாகப் படித்து விவாதம் செய்தால் தத்துவப் புரிதல் வலுவடையும் . 

நூல் வடிவமைப்பில் சில குறைபாடுகள் உள்ளனஆசிரி யர் கருத்து எது ? எதை மறுக்கிறார் ?எதை மேற்கோள்காட் டுகிறார் என்பதை பிரித்து சாதாரண வாசகன் புரிந்து கொள்வது சிரமம்.மேற்கோள்களை சாய் வெழுத்தாகவோ அல்லது சற்று உள்ளடக்கியோசிலவற்றைதடிப்பெழுத்தாகவோ அச்சிட்டிருந்தால் குழப்பம் தவிர்த்திருக்கலாம்
இந்நூல் படித்து முடியும் முன் பல கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாது . 

·         மனம்ஆன்மா என்பதெல்லாம் மூளையின் உணர்ச்சிப் பிரதேசத்தின் பதிவு என்றஅறிவியல் புரிதல் மிகச் சரிதான்ஆனால் அந்த உணர்ச்சிகள் ஒரு இயற்பியல்சக்தியாக தனிமனிதனிடமும் சமூகத்திலும் வினையாற்ற வில்லையா?இந்நிலையின் மனத்தின் சமூகப் பாத்திரம் குறித்தும்தனிமனிதனுக்குள் மனதின்பாத்திரம் குறித்தும் வெறும் எந்திரவியல் பார்வை போதுமாசரியானதாபயன்தருமா ?

·         மனச்சாட்சி , மக்களின் மனஓட்டம்சமூக உளவியல்மனதை வென்றெடுப்பதுமனதை ஒருமுகப்படுத்துவதுமன உறுதி இவையொற்ற சொற்பிரயோகங்களுக்குப்பின்னால்உள்ள ஆற்றலை வெறுமே மூளையின் செயல்பாடென மட்டும் சுருக்கிக்கூறிவிட இயலுமா?


·          “ ஒரு கருத்து மக்களின் கவ்விப் பிடிக்கும் போது அது ஒரு இயற்பியல் சக்தியாகிவிடுகிறது” எனக் காரல் மார்க்ஸ் அறுதியிட்டுக் கூறியது மனத்துக்கும் பொருந்தும்அல்லவா ? மார்க்சிஸ்டுகளும் மனம்மன உறுதிமனச்சாட்சி போன்ற மனம்தொடர்பான வார்த்தைகளைத் தொடர்ந்து பெருமளவு பயன்படுத்திவருதல் கண்கூடு.இதன் பொருள் கருத்துமுதல் வாதிகள் நோக்கில் மனம் என்று இவர்கள்கூறாவிடினும் மனம் எனும் இயற்பியல் சக்தியை இவர்கள் குறைத்துமதிப்பிடவில்லை அல்லவா?

இது போன்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்பி விளக்கம்தேடும் போது ஒருங்கிணைந்தசரியான பார்வையும் புரிதலும் வலுப்பெறும் இந்நூல் பரந்த கூர்மையான ஆழமானவிவாதத்துக்கு வழிகோலியுள்ளதுஇயங்கியல் பொருள்முதல் வாதத்தை மிகச் சரியாகஉள்வாங்க இந்த விவாதம் உதவும் என்பதில் ஐயமில்லைஅதுவும் மார்க்சியத்தை தமிழ்ச்சூழல் சார்ந்து விவாதிக்க இந்நூல் பெரிதும் உதவும்இந்நூலைப் படிப்பதும் கூட்டாகவிவாதிப்பதும் காலத்தின் தேவை 

நன்றி : தீக்கதிர் , புத்தகமேசை , 19-10-2014