செவ்வாய், செப்டம்பர் 23, 2014

இரத்த தானம் செய்வீர்; உயிர் காப்பீர்!

இன்றைய அவசர உலகில் பல்வேறு வகையான நிகழ்வுகள் தினம்தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. நாம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு விபத்துக்களைச் சந்திக்கின்றோம்.

ஒருவர் விபத்தினாலேயோ அல்லது வேறு ஏதாவது நோயினாலேயோபாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்படும் போது, அங்கு தேவைப்படுவது இரத்தம்.

அந்த இரத்தத்தினை நாம் பிறர்க்கு வழங்கும் பொழுது அவர்களின் உயிரினைக் காக்கும் பொருட்டு உயரிய சேவையினைச் செய்வதற்குச் சமம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் இரத்ததானம் செய்வதின் பயன்களையோ ,சிறப்பினையோ விளக்குவதற்கு அல்ல; இன்று நம்மில் 20-30 சதவிகிதம் மட்டுமே இரத்த தானத்தினைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு தொடர்ச்சியாக தகுந்த இடைவெளியில் இரத்த தானம் செய்து உயிர் காக்கும் மகத்தான சேவையினைச் செய்து வருகின்றனர். இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு இன்மையே இதற்கு காரணம். இந்தக் கட்டுரையின் மூலம் இந்த எண்ணிக்கை சிறிதளவாவது கூடுமாயின் இது மேலும் பல உயிர்களைக் காப்பதற்கு உதவும். அதுவே இக்கட்டுரையின் குறிக்கோள் ஆகும்.

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் சராசரியாக 350 மி.லி. (1 unit) இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.


இரத்த தானம் செய்வதற்குத் தேவையான தகுதிகள் :


*
இரத்த தானம் செய்பவரின் வயது 18 வயது நிரம்பியவராகவும் 60 வயதினை மிகாதவராகவும் இருத்தல் அவசியம்.

*
இரத்த ஹிமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு மேல் இருக்க வேண்டும்.

*
இரத்த தானம் செய்வபரின் எடை 45 கிலோவிற்கு மேல் இருக்க வேண்டும்.

*
ஆண், பெண் இருபாலரும் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.

இரத்ததானம் செய்யும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான தகுதிகள்

*
எந்த ஒரு தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டவராகவும் இருத்தல் கூடாது.

*
கடந்த ஓராண்டுக்குள் எந்த தடுப்பு மருந்தும் உபயோகப் படுத்தி இருத்தல் கூடாது.

*
கீழ்க்கண்ட நோய்தாக்கம் ஏற்பட்டவர் எனின் இரத்த தானம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

1.
எய்ட்ஸ் 2. மேக நோய் 3. இரத்த புற்றுநோய் 4. இரத்த அழுத்தம் 5. வலிப்பு நோய். நீரழிவு நோய் உள்ளவர்களில் மாத்திரை எடுப்பவர்கள் இரத்த தானம் செய்யலாம், ஆனால் இன்சுலின் மருந்து எடுப்பவர்கள் இரத்த தானம் செய்யக்கூடாது.

*
இதற்கு முன்பு ஏதாவது அறுவை சிகிச்சை செய்து இருப்பின் அல்லது

*
இரத்தம் ஏற்றப்பட்டவராக இருப்பின் இரத்த தானம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

*
இரத்த தானம் செய்பவர் பெண் எனின் தேவையான தகுதிகள்

*
மாதவிடாய் காலங்களில் இரத்ததானம் செய்வதை தவிர்க்க வேண்டும்

*
தாய்மையடைந்த காலம் முதல் குழந்தை பிறந்து தாய்பால் நிறுத்தும் வரை இரத்த தானம் செய்யக்கூடாது.

*
வேறு ஏதாவது குறைபாட்டிற்காக சிகிச்சை பெற்று வருபவர்கள் இரத்த தானம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

*
இரத்த தானம் செய்பவர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்

*
மது அருந்தியவர்கள் இரத்ததானம் செய்ய முடியாது. மது அருந்தியதில் இருந்து 24 மணிநேரம் ஆகியிருத்தல் அவசியம்.

*
புகைப்பிடித்திருப்பின் குறைந்தது ஒருமணி நேரத்திற்குப் பிறகு இரத்த தானம் செய்வது சிறந்தது. இரத்த தானம் செய்த பிறகு ஒரு மணிநேரம் கழிந்த பிறகே புகைப் பிடிப்பது நல்லது. அதற்கு முன்பே புகைப்பிடிப்பது மயக்கம் ஏற்படுதல் போன்றபாதிப்புகளை உருவாக்கும்.

*
ஆகவே புகையும் மதுவையும் முடிந்த அளவிற்கு தவிர்ப்பது மேலும் உடலுக்கு நன்மை பயக்கும்.

*
இரத்த தானம் செய்பவர் நன்கு உணவு உண்ட பிறகே இரத்த தானம் செய்யவேண்டும். போதிய உணவு, உறக்கம் இரண்டும் மிகவும் அவசியம்.

*
இரத்த தானம் செய்வதற்கு முன்பு கைகளை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.

*
இரத்த தானம் தொடர்ச்சியாக செய்ய விரும்புபவர் குறைந்தது 3 மாத இடைவெளிக்குப் பிறகே இரத்த தானம் செய்ய வேண்டும்.

*
இரத்த தானம் செய்தவுடன் கைகளை நன்றாக மடக்கி மேலே உயர்த்திப் பிடிக்க வேண்டும். குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு பளுவுள்ள பொருட்களை தூக்குவது போன்ற கடினமான வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

இரத்த வங்கியின் செயல்பாடுகள்

*
ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சராசரியாக 4½ (நான்கரை) முதல் 5½ (ஐந்தரை) லிட்டர் இரத்தம் உள்ளது.

*
இரத்த தானம் செய்ய வருபவரிடமிருந்து தேவைக்கேற்ப 350மிலி முதல் 450 மிலி வரை மட்டும் சேகரிக்கப்படுகிறது.

*
சேகரிக்கப்பட்ட இரத்தம் இரத்த வங்கி களில் குளிரூட்டப்பட்டு பாதுகாக்கப்படுகின்றது.

*
சேகரிக்கப்பட்ட முழு இரத்தத்திலிருந்து தேவைக்கேற்ப இரத்தப் பகுதிப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகின்றது.

*
இரத்தப் பகுதிப் பொருட்கள் (இரத்தச் சிகப்பணு, இரத்த தட்டுக்கள், பிளாஸ்மா) அனைத்தும் தகுந்த வெப்பநிலையில் குறிப்பிட்ட காலம் வரையிலும் பாதுகாக்கப்படுகிறது.

*
ஒவ்வொரு இரத்தப் பகுதிப் பொருட்களும் கீழ்க் கண்ட நாட்கள் வரையிலும் பதப்படுத்தப்பட்டு பாது காக்கப்படுகின்றது.

*
முழு இரத்தம் (Whole blood)
* 35
நாட்கள்

*
இரத்தச் சிகப்பணு (Packed Red cells)
* 42
நாட்கள்

*
இரத்தத் தட்டுக்கள் (Platelets)
* 5
நாட்கள்

*
பிளாஸ்மா (Plasma)
* 1
வருடம்

*
இரத்ததானம் செய்தவர்களின் இரத்தம் பரிசோதனை செய்தபிறகே நோயாளிக்குச் செலுத்தப்படுகின்றது.

*
இரத்தம் செலுத்தப்படுவதற்கு முன் அந்த இரத்தம் நோயாளிக்கு பொருந்துமா என்று சோதனை செய்தபிறகே வழங்கப்படுகின்றது.

இரத்த தானம் செய்பவர்கள் பெறும் நன்மைகள்

*
இரத்த தானம் செய்வது பிறர்நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன் நலன் காப்பதற்கு மட்டுமல்ல தன்நலன் மேம்படுவதற்கும் உதவும்.

*
இரத்த தானம் செய்வது இயற்கையாக புதிய இரத்தம் உடலில் ஏற்றப்படுவதற்குச் சமம்.

*
தற்போதைய ஆய்வு களில் தொடர்ச்சியாக இரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு என்று கண்டறியப் பட்டுள்ளது.

*
ஹிமோகுளோபின் அளவினை கட்டுப்படுத்தவும் சமச்சீராக பராமரிக்கவும் இரத்த தானம் பயன்படுகிறது.

*
இரத்த தானம் செய்வதன் மூலம் இரத்த அழுத்தம் (Heamoglobin) சீராக பராமரிக்கப்படுகின்றது. இதன் மூலம் பலவிதமான நோய்கள் தவிர்க்கப்படுகின்றது.

*
இரத்ததானம் செய்வதன் மூலம் எந்த பின்விளைவுகளும் ஏற்படாது. மயக்கம் ஏற்படுதல் போன்றவை அனைத்தும் பயத்தினாலேயே என்பது தான் உண்மை.

*
மயக்கம் ஏற்படின் உடனடியாக கால்களை மேலே தூக்கியவாறு தரையில் படுக்க வைக்க வேண்டும் அல்லது கால்களுக்கு இடையில் தலையினை வைத்தவாறு அமர வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடனடியாக பழைய நிலைக்கு திரும்பி விடுவர்.

*
இரத்த தானம் செய்வதன் மூலம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

*
இரத்த தானம் செய்வது பலவிதமான நன்மைகளை நமக்கும் பிறர்க்கும் அளிக்கின்றது.

இரத்ததானம் செய்வதினைப் பற்றிய அறியாமையை உடைத்து அனைவரும் இரத்த தானம் செய்க!

பிறரைக் கெடுத்து வாழ்வது வாழ்க்கையல்ல கொடுத்து வாழ்வதே வாழ்க்கை. ஆகவே தங்களால் இயன்றஅளவு பிறர்க்கு தானம் செய்து வாழ்க!


இரத்த தானம் செய்வீர்! மனிதாபிமானத்தை வளர்ப்பீர்! விலைமதிப்பற்ற உயிர்களைக் காப்பீர்!

வியாழன், செப்டம்பர் 04, 2014

பழங்களின் பெயர் தமிழில்:


1 Apple குமளிப்பழம், சீமையிலந்தப்பழம்
2 Ambarella அம்பிரலங்காய்
3 Annona சீத்தாப்பழம்
4 Annona muricata முற்சீத்தாப்பழம்
5 Apricot சர்க்கரைப்பாதாமி
6 Avocado வெண்ணைப்பழம்/ஆனைக்கொய்யா
7 Banana வாழைப்பழம்
8 Batoko Plum லொவிப்பழம்
9 Bell fruit பஞ்சலிப்பழம், ஜம்பு
10 Bilberry அவுரிநெல்லி
11 Blackberry மேற்கத்திய நாவற்பழம்
12 Black currant கறுந்திராட்சை
13 Blueberry ஒரு வகை நெல்லி
14 Bread fruit கொட்டைப்பலா, சீமைப்பலா
15 Butter fruit ஆனைக்கொய்யா
16 Cantaloupe மஞ்சல் நிற முலாம்பழம்
17 Cashew fruit முந்திரிப்பழம், கஜு
18 Cherimoya சீத்தாப்பழம்
19 Cherry சேலாப்பழம்
20 Chickoo சீமையிலுப்பை
21 Citron கடார நாரந்தை
22 Citrus aurantium கிச்சலிப்பழம்
23 Citrus reticulata கமலாப்பழம்
24 Citrus sinensis சாத்துக்கொடி
25 Clementine நாரந்தை
26 Cocoa fruit கொகோப்பழம்
27 Cranberry குருதிநெல்லி
28 Cucumber வெள்ளரிப்பழம்
29 Custard apple சீத்தாப்பழம்
30 Damson ஒரு வித நாவல் நிறப்பழம்
31 Date fruit பேரீச்சம் பழம்
32 Devilfig பேயத்தி
33 Dragon fruit ட்றொகன் பழம்
34 Duku டுக்கு
35 Durian முள்நாரிப்பழம், தூரியன்
36 Emblica நெல்லி
37 Eugenia rubicunda சிறு நாவற்பழம்
38 Feijoi/Pinealle guava புளிக்கொய்யா
39 Fig அத்திப்பழம்
40 Persimmon fruit சீமை பனிச்சம்பழம்
41 Gooseberry கூஸ்பெறி
42 Grapefruit பம்பரமாசு
43 Grapes கொடி முந்திரி, திராட்சை
44 Guava கொய்யாப்பழம்
45 Honeydew melon தேன் முழாம்பழம்
46 Huckle berry (ஒரு வித) நெல்லி
47 Jack fruit பலாப்பழம்
48 Jumbu fruit ஜம்புப்பழம்/ பஞ்சலிப்பழம்
49 Jamun fruit நாகப்பழம்
50 Kiwi fruit பசலிப்பழம்
51 Kumquat (பாலைப்பழம் போன்ற ஒருப்பழம்)
52 Kundang மஞ்சல் நிற சிறிய பழம்
53 Lansium லன்சியம்
54 Lemon வர்க்கப்பழம்
55 Lime எழுமிச்சை
56 Loganberry லோகன் பெறி
57 Longan கடுகுடாப் பழம்
58 Louvi fruit லொவிப்பழம்
59 Lychee லைச்சி
60 Mandarin மண்டரின் நாரந்தை
61 Mango மாம்பழம்
62 Mangosteen மெங்கூஸ் பழம்
63 Melon இன்னீர்ப் பழம், முழாம்பழம்
64 Morus macroura மசுக்குட்டிப்பழம்
65 Mulberry முசுக்கட்டைப் பழம்
66 Muscat grape திராட்சை
67 Orange தோடம்பழம்
68 Palm fruit பனம் பழம்
69 Papaya பப்பாப் பழம்
70 Passion fruit கொடித்தோடை
71 Peach குழிப்பேரி
72 Pear பேரி, பெயார்ஸ்
73 Pine apple அன்னாசிப் பழம்
74 Plum ஆல்பக்கோடா
75 Pomegranate மாதுளம் பழம், மாதுளை
76 Pomelo பம்பரமாசு
77 Pulasan (ஒரு வகை)றம்புட்டான்
78 Quince சீமை மாதுளம்பழம்
79 Rambutan றம்புட்டான்
80 Rasberry புற்றுப்பழம்
81 Red banana செவ்வாழைப் பழம்
82 Red Currant ஒரு வித லொவி
83 Sapodilla சீமையிலுப்பை
84 Satsuma நாரத்தை
85 Sour sop/ Guanabana அன்னமுன்னா பழம்
86 Strawberry செம்புற்றுப்பழம்
87 Syzygium ஜம்புப்பழம்
88 Tamarillo குறுந்தக்காளி
89 Tamarind புளியம்பழம்
90 Tangerine தேன் நாரந்தை
91 Tomato தக்காளிப்பழம்
92 Ugli fruit முரட்டுத் தோடை
93 Water melon வத்தகைப்பழம், குமட்டிப்பழம், தர்பூசணி
94 Wax jumbu நீர்குமளிப்பழம்
95 Resberry இளஞ்செம்புற்றுப் பழம்
96 Woodapple விளாம்பழம்

புதன், செப்டம்பர் 03, 2014

பிரம்மசாரிகளுக்கான உணவு வகைகள்:

''பெருநகரங்களில் அறை எடுத்துத் தங்கி, கல்லூரி செல்லும் மாணவர்களும் சரி. வேலைக்கு போகும் இளைஞர்களும் சரி, காலை உணவையே மறந்து வாழ்கின்றனர். இன்னும் சிலர் 'சமைத்துச் சாப்பிடுவோம்என்று முடிவு எடுத்து, சரியாக சமைக்கத் தெரியாமல் பாதி வெந்தும், வேகாமலும், காரம் அதிகமாகவும், உப்பு போட மறந்தும்... என ஏகப்பட்ட களேபரங்களுடன் ஏனோ தானோ என்று சாப்பிட்டு, உடலைக் கெடுத்துக்கொள்கின்றனர். விளைவு, வயது கூடக்கூட, உடலில் எதிர்ப்பு சக்தியும், ஸ்டாமினாவும் குறைந்து நோய்வாய்ப்படும் வாய்ப்பு உருவாகிறது''
அட்டென்ஷன் பேச்சுலர்ஸ்...!
1. காலை உணவைத் தவிர்த்தால் வயிற்றில் புண், உடல் சோர்வு, மயக்கம், தலை சுற்றல் ஏற்படும். வயிற்றில் சுரக்கும் அமிலம், வயிற்றை அரிக்கத் துவங்கிவிடும். சில நாட்களில் அதுவே அல்சராக மாறி, பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் சக்கரையின் அளவும் அதிகரிக்கும். மேலும் உடல் பருமன், தொப்பை வரக் காரணமாக அமைந்துவிடும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
2.
காரம் குறைவான உணவுகளைச் சமைத்து உண்ணுங்கள். எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும் தன்மை காரத்துக்கு அதிகம்.
3.
அதிகப்படியான காய்கறிகளைச் சமைத்துச் சாப்பிடுங்கள். சுறுசுறுப்பாகச் செயல்பட பெரிதும் உதவும்.
உடுத்தும் உடையிலும் பயணிக்கும் வாகனத்திலும் அக்கறை காட்டும் இன்றைய பேச்சுலர்கள், உண்ணும் உணவில் காட்டும் கவனம் மிகக் குறைவுதான். அந்த 'மேன்ஷன் ராசாக்களுக்காக, சில நொடிகளில் செய்யக்கூடிய சில சிம்பிள் ரெசிப்பி:
இனிப்பு அவல் பிரட்டல்
தேவையானவை: சிவப்பு அவல் - 100 கிராம், வெல்லம் - 50 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு - சிறிதளவு, பொடித்த சுக்கு, ஏலக்காய் - ஒரு சிட்டிகை, முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை: சிவப்பு அவலைத் தண்ணீரில் சுத்தப்படுத்தி, சிறிதளவு உப்பு சேர்த்து ஈரத்துடன் 10 நிமிடம் ஊறவைக்கவும். வெல்லத்தை இடித்துப் பொடியாக்கி சேர்த்து, சுக்கு, ஏலக்காய் பொடியைக் கலந்து நன்றாகக் கிளறவும். கடைசியில் இதில் முந்திரி, திராட்சை சேர்த்து உண்ணலாம்.
பலன்கள்: சிவப்பு அவலில் கலோரி, கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. வெல்லத்தில் இரும்புச்சத்து இருப்பதால் உடலுக்கு நல்லது. காலை உணவாக இதைச் சாப்பிடுவதன் மூலம், அந்த நாளுக்குத் தேவையான முழுச் சத்துக்களும் கிடைத்துவிடும்.
கம்பு ரொட்டிப் பிரட்டல்
தேவையானவை: கம்பு - 300 கிராம், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், இஞ்சி பூண்டு விழுது - தலா ஒரு சிட்டிகை, வெங்காயம், தக்காளி - தலா 100 கிராம், பச்சை மிளகாய் - 3, புதினா - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: கம்பு மாவை சப்பாத்தி மாவுப் பதத்துக்கு பிசைந்து, பதமாக இட்டு, தோசைக் கல்லில் இரு புறமும் ரொட்டி போல் சுட்டு எடுத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பொன்னிறமாக வதங்கியதும், நறுக்கிய தக்காளி, கரம் மசாலா, உப்பு சேர்த்து, மசாலா வாசம் போக வதக்கவும். நறுக்கிவைத்துள்ள கம்பு ரொட்டி துண்டுகளை சேர்த்துக் கிளறவும். சுவையான கம்பு ரொட்டிப் பிரட்டல் தயார்.
பலன்கள்: கம்பில் இரும்பு, மக்னீசியம், வைட்டமின் பி மற்றும் சி போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதனால் உடலுக்கு அதிகம் வலு சேர்க்கும்.
கீரை ஜாம்
தேவையானவை: பொன்னாங்கண்ணிக் கீரை, பசலைக்கீரை (பாலக்), முளைக்கீரை - தலா ஒரு கட்டு, வெல்லம் - 500 கிராம்.
செய்முறை: கீரைகளை மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அரைத்து வைத்துள்ள கீரைக் கலவையை, பச்சை வாடை போகும் அளவுக்கு, வதக்க வேண்டும். நீர் வற்றியதும், பொடியாக்கிவைத்துள்ள வெல்லத்தைச் சேர்த்து, தொடர்ந்து 15 முதல் 20 நிமிடம் வரை கிளறவும். ஜாம் போல இறுகியதும் இறக்கவும்.
இந்த ஜாமை ஃப்ரிட்ஜில் 3 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம். பிரட், சப்பாத்தி போன்றவற்றில் தடவிச் சாப்பிடலாம்.
குறிப்பு: கொத்துமல்லி, புதினாவுக்கு துவர்ப்புத்தன்மை அதிகம் இருப்பதால், சேர்க்க வேண்டாம். சுவையை மாற்றும் தன்மை கொண்டவை இவை.
பலன்கள்: இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, கால்சியம், நீர்ச் சத்து, பாஸ்பரஸ் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. உடலுக்கு மிகவும் நல்லது.
காய்கறி அவல் பிரட்டல்
தேவையானவை: சிவப்பு அரிசி அவல், துருவிய கேரட், மஞ்சள் பூசணி துருவல் - தலா 100 கிராம், மாங்காய் துருவல், நெல்லிக்காய் துருவல் - தலா 50 கிராம், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, மிளகுத்தூள் - சிறிதளவு, இஞ்சி - சிறு துண்டு.
செய்முறை: சிவப்பு அவலைத் தண்ணீரில் சுத்தப்படுத்தி, சிறிது உப்பு சேர்த்து ஈரத்துடன் 10 நிமிடம் ஊறவைக்க வேண்டும். இதனுடன் துருவிவைத்துள்ள கேரட், மாங்காய், பூசணி, நெல்லிக்காய் துருவல்களைச் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியில் அரைத்த இஞ்சியுடன், கொத்தமல்லி, மிளகு, உப்பு சேர்த்து கிளறவும்.
குறிப்பு: மாங்காய் இல்லை என்றால், சில துளிகள் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கிளறிச் சாப்பிடலாம்.
பலன்கள்: அவலுடன் கேரட் சேரும்போது வைட்டமின் சத்துக்கள் அதிகரிக்கும். பூசணியில் உள்ள தாதுக்கள் உடலுக்கு நல்லது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறையும். இதை காலை உணவாகவும் மதிய உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
மல்லி சாமை சோறு
தேவையானவை: சாமை புழுங்கல் அரிசி - 200 கிராம், கொத்துமல்லி - ஒரு கட்டு, புதினா, கறிவேப்பிலை - சிறிதளவு, பச்சை மிளகாய் - 4, இஞ்சி பூண்டு அரைத்த விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய் - 3, பட்டை - 5, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 கரண்டி.
செய்முறை: கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, இஞ்சி, பூண்டு இவற்றை மிக்சியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை, ஏலக்காய் சேர்த்து வாசம் வர வறுத்து, அத்துடன் அரைத்துவைத்துள்ள கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும். 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி (1:2 என்ற விகிதத்தில்) குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வைத்து இறக்கவும்.
இதனுடன் கேரட், வெள்ளரி, வெங்காயம் சேர்த்து தயிர் பச்சடியாகவும் செய்து சாப்பிடலாம்.
பலன்கள்: புரதச்சத்து, இரும்புச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. கொழுப்பைக் குறைக்கும். பசியைக் கட்டுப்படுத்தும்.
தினை தேங்காய் கஞ்சி
தேவையானவை: தினைப் புழுங்கல் அரிசி - 200 கிராம், பாசிப் பருப்பு - 100 கிராம், பூண்டு - 4 பல், மிளகு, வெந்தயம் - சிறிதளவு, தேங்காய்ப் பால் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தினை மற்றும் பாசிப் பருப்பைக் கழுவிச் சுத்தம்செய்து, ஒன்றுக்கு ஆறு என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைக்கவும். இதனுடன் வெந்தயம், பூண்டு, மிளகு சேர்த்து 5 அல்லது 6 விசில் வரும் வரை குக்கரில் வேகவைக்க வேண்டும். இறுதியாக தேங்காய்ப் பால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, குழைய வேகவைக்க வேண்டும். சுவையான தினை தேங்காய் கஞ்சி தயார்.
பலன்கள்: தினையில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட், தாதுக்கள், நுண் சத்துக்களும் நிறைந்துள்ளது. கலோரிகள் நிரம்பிய உணவு என்பதால் ஆற்றல் கொடுக்கும்.

நன்றி: பெட்டகம்.

பணம், பணம், பணம், பணம்

"பணம் என்னடா பணம் பணம் !,குணம் தானடா நிரந்தரம்", என்றும், " பாசம் மட்டும் போதும் பெண்ணே காசு பணம் என்னத்துக்கு? " என்று சினிமாவிற்கு சிலர் பாட்டெழுதியது, பாடியது, நடித்தது எல்லாமே பணத்துக்காகத்தான்.


பணக்காரனாக வேண்டுமா ? அதற்கு செல்வத்தை குவிக்க வேண்டிய
அவசியமில்லை ! தேவைகளைக் குறைத்துக்கொண்டாலே போதும்.

முட்டாள் மேலும் மேலும் பணத்தை தேடிக்கொண்டிருப்பான். அறிவாளி, 
இருக்கும் கொஞ்ச பணத்தையும் அனுபவித்துக்கொண்டிருப்பான்.

பானையில்  சோறிருக்கும்வரை, கூரையில் காக்கை கூட்டத்திற்கு 
குறைவில்லை.  கையில் பணமிருக்கும் வரை, உறவு கூட்டத்திற்கும் 
பஞ்சமில்லை.

பணக்காரனின் ஜலதோஷம் ஊருக்கெல்லாம் தெரிய வரும். ஏழை
 இறந்துபோனால்  கூட யாருக்கும் தெரியாது.

பணம் என்ற பாஸ்போர்ட் உங்கள் கையில் இருக்குமானால் 
சொர்க்கத்துக்குகூட வெகு சுலபமாக சென்று விடலாம்.

கண்ணில் பட்ட பொருளை எல்லாம் வாங்கும் பழக்கமானது, முடிவில்
தேவையான  பொருளைக்கூட விற்கும் நிலைக்கு கொண்டு போய் விட்டு
விடும்.

பணம் இருந்தால் உன்னை உனக்கு தெரியாது. பணமில்லாவிட்டால் 
உன்னை யாருக்குமே தெரியாது.

பிறக்கும்போது மூடிய கைகளோடு பிறக்கிறோம். இறக்கும்போது 
திறந்த கைகளோடு  போகப்போகிறோம். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட
காலத்தில் நமக்கு கிடைப்பது எல்லாமே லாபந்தான்.

ஒண்ணுந்தெரியா ஆளானாலும் பணமிருந்தாலே, அவனை உயர்த்தி பேச
 மனிதர் கூட்டம் என்றும் தப்பாதே ! என்ன அறிவு இருந்திட்டாலும் 
பணமில்லாத ஆளை, ஒரு மனிதனாக உலகம் என்றும் மதிக்க மாட்டாதே.

கருவறையிலிருந்து வெளிவருவது முதல் கல்லறைக்குள் போய் 
அடங்குவதுவரை, சில்லறையை வெட்டினால்தான், எந்த ஒரு காரியமும் 
நடக்கும் என்பது எழுதாத நீதியாகிவிட்டது.!.

பணத்தை சேமிப்பதென்பது, குண்டூசியால் பள்ளம் தோண்டுவதை 
போன்றது. பணத்தை செலவழிப்பதென்பது, குண்டூசியால் பலூனை 
உடைப்பது போன்றது !