வியாழன், நவம்பர் 06, 2014

மனமென ஒன்று உண்டா? :ஆரோக்கியமான விவாதம்


நன்றி : சு.பொ.அகத்தியலிங்கம்

“ உனக்கு மனசுன்னு ஒண்ணு இருக்குதாஇல்லையா?” 
“ மனமென ஒன்று உண்டா?”
பார்வைக்கு இரண்டு கேள்விகளும் ஒன்றுபோல் தோன்றினும் ஒன்றல்ல

முதல் கேள்வி வழக்கமாய் நம்மிடையே நடக்கும் உரை யாடலில் இடம்பெறுவதுஎதிரேஇருப்பவரின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் தன்மையுடையதுஇரண்டாவது கேள்விஅறிவியல் சார்ந்த வினாஇதற்கான விடை தேடல் தத்துவ உலகிற்கு நம்மைஇட்டுச்செல்லும்.

மனச்சாட்சியின் படி நடந்து கொள்வேன் எனஉறுதிமொழி ஏற்பதும்மனச்சாட்சிஉறுத்தவில்லையாஎன குற்றம்சாட்டுவதும் இயல்பாக நடக்கிற ஒன்று.திடீரென “மனம் எனஒன்று இல்லை” என்று யாராவதுசொன்னால் ஏற்பது அவ்வளவு சுலபமல்ல . ஆயின்கருத்துமுதல் வாதத்துக்கு எதிரான போரில் நமது புரிதல் மேம்படவும்கூர்மையடையவும்இதுபோன்ற அலசல்கள் அவசியம்தேவைப்படுகிறது . பாவீரமணி எழுதியுள்ள “ மனமெனஒன்று உண்டா?” என்கிற நூல் “மனம்” குறித்த ஒரு பரந்த விவாதத்திற்குத் தளம்அமைத்துள்ளது . 
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்வெளியிட்டு வரும் மாத இதழான “செந்தமிழ்ச்செல்வியில் ஒரு ஆக்கப்பூர்வமான விவாதம் நடந்துள்ளதுபுலவர் நடேசநாராயணன் “மனம்என்று ஒன்றில்லை” என இரு ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார்அதற்கு தமிழாகரர்தெ.முருகசாமிஎன்பவர் “மனம் என ஒன்று உண்டு” என மறுப்பு எழுதினார்பாவீரமணிஅவரை மறுத்து “மனம் என ஒன்று இல்லை” என பதிலடி கொடுத்தார்.மீண்டும்தெ.முருகசாமி தன் முந்தைய நிலைப்பாட்டை வலியுறுத்தி யும் வீரமணியைமறுத்தும் பதில் எழுதினார்மீண்டும் வீர மணி அதனை மறுத்து “ மனமென ஒன்று இல்லை “என உறுதி செய்தார்இவை அனைத்தின் தொகுப்பாக இந்நூல்வந்துள்ளதுஆக ஒருபக்ககருத்தாக அன்றி இருதரப்பு வாதமாக ஒட்டியும் வெட்டியும் விவாதத் தொகுப்பாகஇந்நூல்வந்துள்ளதுஅதே சமயம் விவாதம் முடிந்ததாகக் கருதக்கூடாதுஇந்நூலைஅடியொற்றி இவ்விவாதம் முன்னெடுக்கப்பட்டால் பயனுள்ள தத்துவ போதனையாகஅமையும் என்பதில் ஐயமில்லை.

 “ உண்மையில் மனம் என்று ஒன்று இல்லை . புலன்களால் பெறும் அறிவுகள்புலன் நரம்புச்செல்களில் மூளை நரம்பு செல்களில்நினைவுகளாகப் பதிந்து விடுகின்றன . இந்தநினைவுகளையே நாம் `மனம்’ எனக் கற்பனை செய்து கொள்கிறோம்மனம் என்பதுஅருவம்நிழல்மனம் என்று எந்த உறுப்பையும் சுட்டிக்காட்ட முடியாதுஆனால்அறிவுக்குஅடையாளம் காட்ட முடியும்ஆம்நமது ஐந்து பொறிகள்தாம் அறிவின் உறுப்புகள்அறிவின்வாயில்கள்” என்று நடேச நாராயணன் விவாதத்தைத் துவங்குகிறார்இது உண்மையைநெருங்க செய்யும் வாதம்ஆயினும் முழு உண்மையாகுமா ?


தெ.முருகசாமி மனம் வேறு மூளை வேறு என வாதிடுகிறார். “மனமோ காட்டலாகப்பொருளாகிய அக உறுப்பு” என்கிறார் . மேலும் மனமே மூளையை ஆட்டுவிப்பதாகக்கூறுமளவுக்குச் சென்றுவிடுகிறார்தொல்காப்பியம்குறள் இவற்றிலிருந்துஎடுத்துக்காட்டுகளோடு வாதிடுகிறார் இவர். “.. தொல்காப்பியர் ‘ மக்கள் தாமே ஆற்றிவுயிரே ’என்பதாகமட்டும் கூறவில்லைஅந்த ஆறாவது அறிவு மனத்தால் அமைவது என்பதாகவேபதிவு செய்துள்ளார்ஆற்றிவதுவேஅவற்றொடு மன்னே’ செய்யுளியல் 27 என்பதால் மனஅறிவு என்றொன்றில்லாமல் இப்படிக் கூறமுடியாதுஇதனால் மனம் என்ற ஒன்றைத்தொல்காப்பியர் கூறினார் எனத் தெளியலாம்” என்கிறார் முருகசாமி.

தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல்அது மொழியின்இலக்கண முறைமையைப் பற்றிப்பேசுவதுஎழுத்தைப் பற்றியோசொல்லைப் பற்றியோ ஒரு முடிவுக்குவருவதற்குஅந்நூலைத் துணை கொள்ளலாம்ஆனால் மனம் என்பதுஉடற்கூற்றியல்அறிவியலைச் (ANATOMY) சார்ந்தது.அதுவும் இப்போது எலும்புகள்வயிறுநுரையீரல்,இதயம்போன்ற உறுப்புகளுக்குத் தனித்தனித் துறை வளர்ந்திருப்பதைப் போன்று மனதைப்பற்றிய உளவியல் [PSYCHOLOGY] துறையும் மூளையோடு தொடர்புடைய நரம்பியல்துறையும்நன்கு வளர்ந்துள்ளனஇக்காலத்தில் மனம் பற்றிய ஒருசரியான முடிவுக்குவரவேண்டுமானால் உளவி யலும் மூளைத் தொடர்புடைய நரம்பியல் துறையும்தாம் நமக்குசரியான வழிகாட்ட முடியும் தொல்காப்பியமோ வேறு இலக்கண நூல்களோ அல்லநாம்எந்தப் பொருளைப் பற்றி ஆராய்ந்தாலும் அதற்குத் திரும்பத் திரும்பத்தொல்காப்பியத்தையும்திருக்குறளையும்மற்ற சமய நூல்களையும் எடுத்துக்காட்டிஅவைகூறும் முடிவுகளே சரியானவை எனச் சாதிக்கிறோம் . இது இக்கால அறிவியல்உலகத்துக்குப் பொருந்தாது” என்கிறார் வீரமணி.

ஆறாவது அறிவு என்பது என்னஇதற்கு “பழக்க அறிவாகும்” என நடேச நாராயணர் கூறும்விளக்கம் போதுமானதல்லஆறாவது அறிவு எது என்பது குறித்த தெளிவுமனம் குறித்தபுரிதலுக்கு அடிப்படையாகத் தெரிய வேண்டும்.இதனை பகுத்தறிவென்பர்அதாவது நன்மைதீமைகளைப்பகுத்துப் பார்க்கும் அறிவென்றே பலரும் சொல்லிவைத்துள்ளனர் .ஆயினும்இதுவும் முழு உண்மையை நெருங்கவில்லை. “கருவிகளை படைக்கும் திறனே” ஆறாவதுஅறி வென மார்க்சும் எங்கெல்சும் வரையரைசெய்ததே சரியான பார்வையாகும்இதனைவீரமணி உள்வாங்கியுள்ளது அவரது வாதத்துக்கு வலு சேர்க்கிறது.

உளவியல் துறையை ஏன் மூளைதுறை என்று கூற வில்லை என்பன போன்ற சிலவாதங்களோடும்அறிவியல் ரீதியாக மூளையின் பாத்திரம் யாதுபுற உலகின் பிரதிபலிப்புத்தான் சிந்தனை என மார்க்ஸ் எவ்வாறு முடிவுக்கு வந்தார் ? சில வேதியல்மருந்துகளின் உதவி கொண்டு மன வியாதிகளைத் தீர்க்க முடிவது எப்படி ? மூளையின்சிறுபகுதியை அறுவை சிகிச்சை செய்துகூட உளவியல் சிக்கல்களுக்கு தீர்வுகாணப்படுகிறதேஎப்படிமூளைதான் அடிப்படை என்பதை இதன் மூலமெல்லாம் அறியமுடியும் எனவாதிடுகிறார் . 
மூளைச்சாவு என்பதையே இப்போது மரணம்என ஏற்றுக்கொள்வதையும் தன் வாதத்திற்குவலுசேர்க்க வீரமணி பயன் படுத்துகிறார். “எண் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம்” என்றபழமொழி மெய்யாகிறது வீரமணி வாதத்தில்மூளைகுறித்த பல்வேறு அறிவியல்செய்திகளை விவரிக்கிறார்பெருமூளை , சிறுமூளை குறித்த அறிவியல் செய்திகளைதருகிறார்இதனை நாம் பள்ளியில் படித்திருக்கிறோம்அதனைவாழ்க்கையோடுஉரசிப்பார்த்திருக்கிறோமாஎன்பதுதான் கேள்விஅதைத்தான் வீரமணி செய்துள்ளார்

மகிழ்ச்சிகோபம்என பல்வேறு உணர்ச்சிகளை மூளையே உணர்கிறதென்றும் ;அப்போதுஇரத்த ஓட்டமும் இதயத்துடிப்பும் மாறுபடும் ; இதயத்தில் கைவைப்போம் ;இதனால் மனம் இதயத்தோடு சம்பந்தப்பட்டதாகக் கருதிவிட்டோம் என்பதையெல்லாம்வீரமணி பல்வேறு எடுத்துக்காட்டுகள் மூலம் விளக்குகிறார் .
அன்பு ,பாசம்இரக்கம் போன்ற நல்லுணர்வுகளும் மூளையின் அறிவுச்சேகரங்களே எனநிறுவுகிறார் . பேய்பிசாசு போன்றவைகற்பனையே எனச் சாடுகிறார் . அறிவியல்பார்வையோடுதான் இவற்றை அணுகவேண்டும் என்கிறார் .

 “ சிற்பியின் மூளையிலோ , பொறியாளரின் மூளையிலோ சிறு சேதமோஊறோஏற்பட்டுவிட்டால் சிற்பியாலோ , பொறியாளராலோ எதனையும் வெளிப்படுத்த இயலாது.அந்நிலையில் மனம் எங்கே போயிற்று ? மனத்தின் பங்குதான் என்ன ? அங்கு சிற்பமும்தோன்றாது ; வீட்டு வரைபடமும் தோன்றாதுஒன்றும் ஏற்படாது என்பதுதான் உண்மை .மூளைதான் எல்லாம் மனம் என ஒன்றில்லை என்பதுதான் அறிவியல் அளிக்கும் விடை.”என முத்தாய்ப்பாகக் கூறிமுடிக்கிறார் வீரமணி .
மனம் என்ற ஒன்று இல்லை என்கிறபோது அதனோடுதொடர்புடைய ஆன்மாகடவுள்போன்ற கருத்தோட்டங்களும் ஆட்டம் காண்கின்றன . மாயாவாதத்துக்குஎதிராகவும் கருத்துமுதல் வாதத்துக்கு எதிராகவும் மார்க்சியத்தை அதாவது இயங்கியல் பொருள் முதல்வாதத்தை முன்வைக் கிறது . இது மிகவும் அடிப்படையானது . ஆகவே இந்நூலை மிகநுட்பமாகப் படித்து விவாதம் செய்தால் தத்துவப் புரிதல் வலுவடையும் . 

நூல் வடிவமைப்பில் சில குறைபாடுகள் உள்ளனஆசிரி யர் கருத்து எது ? எதை மறுக்கிறார் ?எதை மேற்கோள்காட் டுகிறார் என்பதை பிரித்து சாதாரண வாசகன் புரிந்து கொள்வது சிரமம்.மேற்கோள்களை சாய் வெழுத்தாகவோ அல்லது சற்று உள்ளடக்கியோசிலவற்றைதடிப்பெழுத்தாகவோ அச்சிட்டிருந்தால் குழப்பம் தவிர்த்திருக்கலாம்
இந்நூல் படித்து முடியும் முன் பல கேள்விகள் எழுவது தவிர்க்க இயலாது . 

·         மனம்ஆன்மா என்பதெல்லாம் மூளையின் உணர்ச்சிப் பிரதேசத்தின் பதிவு என்றஅறிவியல் புரிதல் மிகச் சரிதான்ஆனால் அந்த உணர்ச்சிகள் ஒரு இயற்பியல்சக்தியாக தனிமனிதனிடமும் சமூகத்திலும் வினையாற்ற வில்லையா?இந்நிலையின் மனத்தின் சமூகப் பாத்திரம் குறித்தும்தனிமனிதனுக்குள் மனதின்பாத்திரம் குறித்தும் வெறும் எந்திரவியல் பார்வை போதுமாசரியானதாபயன்தருமா ?

·         மனச்சாட்சி , மக்களின் மனஓட்டம்சமூக உளவியல்மனதை வென்றெடுப்பதுமனதை ஒருமுகப்படுத்துவதுமன உறுதி இவையொற்ற சொற்பிரயோகங்களுக்குப்பின்னால்உள்ள ஆற்றலை வெறுமே மூளையின் செயல்பாடென மட்டும் சுருக்கிக்கூறிவிட இயலுமா?


·          “ ஒரு கருத்து மக்களின் கவ்விப் பிடிக்கும் போது அது ஒரு இயற்பியல் சக்தியாகிவிடுகிறது” எனக் காரல் மார்க்ஸ் அறுதியிட்டுக் கூறியது மனத்துக்கும் பொருந்தும்அல்லவா ? மார்க்சிஸ்டுகளும் மனம்மன உறுதிமனச்சாட்சி போன்ற மனம்தொடர்பான வார்த்தைகளைத் தொடர்ந்து பெருமளவு பயன்படுத்திவருதல் கண்கூடு.இதன் பொருள் கருத்துமுதல் வாதிகள் நோக்கில் மனம் என்று இவர்கள்கூறாவிடினும் மனம் எனும் இயற்பியல் சக்தியை இவர்கள் குறைத்துமதிப்பிடவில்லை அல்லவா?

இது போன்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்பி விளக்கம்தேடும் போது ஒருங்கிணைந்தசரியான பார்வையும் புரிதலும் வலுப்பெறும் இந்நூல் பரந்த கூர்மையான ஆழமானவிவாதத்துக்கு வழிகோலியுள்ளதுஇயங்கியல் பொருள்முதல் வாதத்தை மிகச் சரியாகஉள்வாங்க இந்த விவாதம் உதவும் என்பதில் ஐயமில்லைஅதுவும் மார்க்சியத்தை தமிழ்ச்சூழல் சார்ந்து விவாதிக்க இந்நூல் பெரிதும் உதவும்இந்நூலைப் படிப்பதும் கூட்டாகவிவாதிப்பதும் காலத்தின் தேவை 

நன்றி : தீக்கதிர் , புத்தகமேசை , 19-10-2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக