வெள்ளி, பிப்ரவரி 26, 2016

நிழல் தந்த போதனை!


=====================
செல்வந்தர் ஒருவர், ஒரு ஞானியைச் சந்தித்து, ""நான் இத்தனை ரூபாய் செலவழித்து இந்த இந்த தானங்கள் செய்துள்ளேன். இதற்கு என்ன பலன் கிடைக்கும்?'' என்று கேட்டார்.
செல்வத்தால் புண்ணியத்தையோ மோட்சத்தையோ விலைக்கு வாங்க முடியாது என்பதை செல்வந்தருக்கு உணர்த்த எண்ணிய ஞானி, அவரைப் பகல் வேளையில் தன்னைப் பார்க்க வருமாறு சொன்னார்.
மறுநாள் மதியவேளை, செல்வந்தர் அவரைப் பார்க்க வந்தார். அவருடன் ஞானியும் நடக்க ஆரம்பித்தார். வெயில் அதிகமாக இருந்த நேரம் அது. செல்வந்தருடைய கால்களுக்கு வெயிலைத் தாங்கும் சக்தியில்லை. மிகவும் சிரமப்பட்டு நடந்து வந்தார்.
செல்வந்தரின் நிலையைக் கண்ட ஞானி, ""அன்பரே, தங்கள் நடையில் ஏன் வேகம் குறைகிறது?'' என்று கேட்டார்.
""வெயில் காலைச் சுடுகின்றது. சூடு தாங்க முடியவில்லை...'' என்றார் அவர்.
உடனே ஞானி, ""உங்களது நிழல் தரையில் விழுகிறதே, அதிலேயே நடக்கலாமே...'' என்றார்.
செல்வந்தரும் தனது நிழலின் மீது கால்களை ஊன்றி நடக்க எவ்வளவோ முயன்றார். ஆனால் நிழல் நகர்ந்து நகர்ந்து சென்றதால் அவரால் முடியவில்லை. பலவாறு முயன்றும் அவரால் தனது நிழலில் நடக்க முடியவில்லை.
ஞானி சிரித்தார். செல்வந்தர், ""எதற்காக சிரிக்கிறீர்கள்?'' என்று கேட்டார்.
"உங்களின் நிழலே உங்களுக்கு உதவவில்லை. நீங்கள் சேர்த்துள்ள செல்வம் எப்படி உங்களுக்குப் புண்ணியம் கிடைக்க உதவும்?'' என்று கேட்டார் ஞானி.
உண்மையை உணர்ந்து கொண்டார் செல்வந்தர்.
-த.ஜெகன், சரலூர்.

...........ஓரெழுத்து ஒருமொழி..........


=================================================== 
தமிழில் ஒரே எழுத்து மட்டும் உள்ள சொற்கள் அறுபதுக்கும் மேலுள ! அவற்றைக் காண்போமா !!! 
================================================== 
1) அ - அழகு, சிவன், திருமால், திப்பிலி 
2) ஆ - மாடு. அற்பம், மறுப்பு, துன்பம் 
3) இ – அண்மைச் சுட்டு 
4) ஈ - அம்பு, அழிவு..ஒரு சிற்றுயிர், கொடு 
5) உ – சுட்டெழுத்து, சிவன், உமை, நான்முகன் 
6) ஊ - ஊன், இறைச்சி.உணவு, திங்கள், தசை 
7) எ – வினாவெழுத்து, 7 என்பதன் குறி 
8) ஏ - ஏவுதல், அம்பு. இறுமாப்பு, மேல் நோக்கல் 
9) ஐ – நுண்மை,, அழகு.அரசன், இருமல், குரு, கோழை 
10) ஓ –ஒழிவு, மதகுப் பலகை. கொன்றை, உயர்வு,நினைவு 
11) ஔ – நிலம், விளிப்பு, கடிதல், 
12) க - நெருப்பு.,அரசன், நான்முகன், காற்று, காமன், மனம் 
13) கா – சோலை, காத்தல், காவடி, வருத்தம், வலி, துலை 
14) கு - பூமி, குற்றம், சிறுமை, தடை, நிறம், நீக்கம் 
15) கூ – கூவு, நிலம், பூமி 
16) கை – கரம், இடம், உடனே, ஒழுக்கம், சேனை, ஆள், ஆற்றல் 
17) கோ - அரசன்,அம்பு, ஆண்மகன், கண், எருது, பசு, பூமி, கோத்தல் 
18) கௌ - 'கௌவு' என்று ஏவுதல்.,கொள்ளு, தீங்கு 
19) சா - இறத்தல், 'சாவு' என்று ஏவுதல், பேய், சோர்தல் 
20) சீ – அடக்கம், அலட்சியம், ஒளி, கலைமகள், பெண், விந்து, துயில் 
21) சூ – சுளுந்து, வாண வகை, விரட்டும் ஒலிக்குறிப்பு, நாயை ஏவுதல் 
22) சே - சிவப்பு., இடபராசி, அழிஞ்சில் மரம், எருது, காளை, 
23) சோ - மதில்.அரண், உமை, வாணாசுரன் நகர் 
24) ஞா – கட்டு, பொருந்து 
25) த – குபேரன், நான்முகன் 
26) தா – கொடு, அழிவு, குற்றம், கேடு, தாண்டு, பகை, வலி, 
27) தீ – நெருப்பு, அறிவு, இனிமை, கொடுமை, சினம், நஞ்சு 
28) து – எரித்தல், கெடுத்தல், வருத்தல், வளர்தல், ”உண்” என ஏவல் 
29) தூ – தூய்மை,தசை, பகை, பற்றுக்கோடு, வெண்மை, வலிமை 
30) தே – கடவுள், அருள், கொள்ளுகை, நாயகன், தெய்வம் 
31) தை -, தைத்தல், தை மாதம், பூச நாள், மகர இராசி, ஒப்பனை
32) ந – இன்மைப் பொருள், மிகுதிப் பொருள் உணர்த்தும் எழுத்து 
33) நா - நாக்கு, அயல், அயலார், திறப்பு, பொலிவு, சுவாலை 
34) நீ - முன்னிலை ஒருமைப் பெயர் 
35) நு – தோணி, நிந்தை, நேரம், புகழ் 
36) நூ - எள், யானை, அணிகலன், தள்ளு, தூண்டு, அசை, 
37) நே – அன்பு, அருள், நேயம் 
38) நை – நைதல், கெட்டுப்போதல், வருந்துதல், நசுங்குதல், வாடல் 
39) நொ – துன்பம், நோய், வருத்தம், தளர்வு, நொய்ம்மை 
40) நோ – வலி, சிதைவு, துக்கம், துன்பம், நோய், வலுவின்மை 
41) நௌ - மரக்கலம், கப்பல். 
42) ப – காற்று, பெருங்காற்று, சாபம், 1/20 - என்பதன் குறி 
43) பா - பாடல்,அழகு, நிழல், பரப்பு, பரவு, தூய்மை, பாம்பு 
44) பி - அழகு. 
45) பீ – மலம், தொண்டி அச்சம். 
46) பூ - மலர், அழகு, இடம்,இலை, கூர்மை, பூமி, பொலிவு, மென்மை 
47) பே – அச்சம், நுரை, மேகம், இல்லை எனும் பொருள் தரும் சொல் 
48) பை – பசுமை, அழகு, இளமை, நிறம், பாம்பின் படம், பொக்கணம், 
49) போ - 'செல்' என்று ஏவுதல். 
50) ம – இயமன், காலம், நிலா, சிவன், நஞ்சு, நேரம் 
51) மா – ஒரு மரம், அழகு, அளவு, அறிவு, ஆணி, மாவு, மிகுதி, வயல் 
52) மீ – ஆகாயம், உயர்ச்சி, மகிமை, மேற்புறம், மேலிடம் 
53) மூ – மூன்று, மூப்பு, 
54) மே – மேன்மை, மேம்பாடு, அன்பு 
55) மை - இருள், எழுது மை, கறுப்பு, குற்றம், நீர், மலடி, மேகம் 
56) மோ – மூக்கினால் மோந்து பார்த்தல் 
57) யா - 'யாவை' , ஐயம், அகலம், கட்டுதல், பாடல் யாத்தல் 
58) வா - 'வா' என்று அழைத்தல். 
59) வி - விசை, அதிகம், ஆகாயம், கண், காற்று, திசை, பறவை,அழகு 
60) வீ - பறவை, நீக்கு, கொல், பூ, விரும்பு, போதல், பூந்தாது 
61) வே – (கூரை) வேய்தல், வேவு பார்த்தல் 
62) வை - 'வை' என்று ஏவுதல், வைக்கோல், கூர்மை, வையகம் 
====================================================== 
நன்றி: முகநூல் - தமிழ்ப் பணி மன்றம் - 
Vaidyanathan Vedarethinam

வியாழன், பிப்ரவரி 04, 2016

ராம ஜபத்தின் மகிமை ….


ராம ஜபத்தின் மகிமை …..
ஒரு நாள் சக்கரவர்த்தி அக்பர் வேட்டைக்காக ஒரு பரந்த வனத்திற்குள் சென்றார்.
அவருடன் மந்திரி பீர்பாலும் சென்றார். ஆனால் காட்டுக்குள் சென்றவர்களுக்கு வழி
தவறிப் போனது. கொடும் வனம், அதைவிட கொடிய பசி இருவரையும் வாட்டி வதைத்தது.
ஆனால் பீர்பாலோ அடர்ந்த வனத்தின் அழகில் மனதை பறிகொடுத்து விட்டார். உடனே ஒரு
பெரியமரத்தின் கீழ் அமர்ந்து “ராம ராம” என்று ராம நாம ஜபத்தை ஜபிக்கத்
தொடங்கினார்.
அக்பர் பசி தாங்க முடியாமல் பீர்பாலை நோக்கி, ஏதாவது உணவை சேகரித்துக் கொண்டு
வாருங்கள். நிச்சயம் சிறிது தூரம் போனால் ஏதாவது வழி தென்படும் என்று கூற,
பீர்பாலோ, அரசே என் வயிறோ உணவிற்கு ஏங்குகிறது. ஆனால் மனமோ ராம நாமத்திற்கு
ஏங்குகிறது. அதனால் மன்னா இப்போது நான் உணவைப் போய் சேகரிக்கும் நிலையில்
இல்லை என்று பதிலளித்தார்.
**இதைக் கேட்டு சினம் கொண்ட அக்பர் தானே உணவை தேடிக் கொண்டு போனார். அவர்
எதிர்பார்த்தது போலவே தொலைவில் ஒரு வீடு தென்பட விரைந்து சென்ற சக்கரவர்த்தி
அக்பரை மனம் மகிழ்ந்து வரவேற்று, அறுசுவை உணவளித்து உபசரித்தனர் அவ்வீட்டினர்.*
***அக்பரும் மனம் கேளாமல் பீர்பாலிற்காகவும் உணவைக் கேட்டுப் பெற்று காட்டில்
மரத்தடியில் ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தவரை அணுகி அதை கொடுத்துவிட்டு
ஏளனத்தோடு கேட்டார். “பீர்பால், இப்போதாவது தெரிந்ததா, நான் எடுத்த சரியான
முடிவால் தான் இன்று உமக்கு உணவு கிடைத்தது. நீங்கள் ஜபித்துக்
கொண்டிருக்கிறீர்களே இந்த ராமஜபம், அதுவா உங்களை பசியாற்றியது?”****இதற்கு
உணவைப் புசித்து முடித்து விட்டு அமைதியாக பீர்பால், ‘அரசே ! உணவிற்காக
மகாபெரிய சக்கரவர்த்தியான தாங்கள் ஒரு சாதாரண பிரஜையிடம் யாசிக்க நேர்ந்தது.
ஆனால் என் பிரபு ராமரோ எனக்கு உணவை மாமன்னரான உங்கள் கையில்
கொடுத்தனுப்பியுள்ளார். இதுதான் ராம ஜபத்தின் மகிமை’ என்று கூற, அக்பர்
வாயடைத்துப் போய் நின்றார்.****~

திங்கள், பிப்ரவரி 01, 2016

வேற்றுமை காட்டாதீர்கள்...

..........................................
வேற்றுமை காட்டாதீர்கள்...
...............................................
விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆப்பிரிக்காரரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து',
நீக்ரோ'வின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும், தனக்குப் பிரிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள்.
ஆனால், விமானம் முற்றிலுமாக நிரம்பி விட்டது என்றும்,
முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித் தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண்.
இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த மற்ற பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி,போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர்.
அந்த அப்பாவி ஆப்பிரிக்கரோ நடக்கும் நிகழ்வால் அதிர்வுற்றிருப்பினும் அமைதியாக இருப்பதற்கு முடிவு செய்து கொண்டார்.
பெண்ணோ முதல் வகுப்புக்கு செல்லப்போகும் மகிழ்ச்சியில் பணிப்பெண்ணின் வருகையை எத்ர்பார்த்திருந்தாள்.
சில நிமிடங்களுக்குப் பின் திரும்பிய பணிப்பெண் குறித்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டவளாக,
"முதல் வகுப்பில் ஒரு இடம் உள்ளது, இந்த விபரத்தை அறிந்து கொள்வதற்கு சற்று நேரம் செலவாகியது, அதன் பிறகு இடமாற்றத்திற்கு விமானியிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது,
விமானியும் "எமது விமானத்தில் எந்த ஒருவரும் தொந்தரவு தரும் ஒருவரின் அருகில் அமர வேண்டிய கட்டாயமில்லை" என்று கூறி விட்டு இடமாற்றத்திற்கு அனுமதி தந்தார்."
என்று கூறி முடித்தாள்.
சக பயணிகளுக்கு அங்கு நடப்பவற்றை உண்மையில் நம்ப முடியவில்லை. குறித்த பெண்ணோ இறுமாப்பில் ஒரு அசட்டுச் சிரிப்போடு முதல் வகுப்பிற்குச் செல்வதற்காக தனது இடத்தை விட்டு எழத் தயாரானாள்.
சரியாக அச்சமயம் பணிப்பெண் நீக்ரோ மனிதனைப் பார்த்து,
''சார்,தங்களுக்காக முதல் வகுப்பில் ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வதற்காக தயாராகுங்கள்.
விமானியவர்கள், எமது நிறுவனத்தின் சார்பாக உங்களிடமிருந்து, இவ்வாறான விறும்பத்தகாத நிகழ்வுக்குக் காரணமான ஒருவரின் அருகில் அமர நிர்ப்பந்திக்கப் பட்டமைக்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றார்." என்று கூறி அந்த மனிதரிடம் தன்னைப் பின் தொடருமாக கேட்டுக் கொண்டாள்.
குறித்த பெண்ணோ அசடுவழிய பணிப்பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
சக பயணிகள் பிரச்சிணையை சமயோசிதமாக, அழகிய முறையில் தீர்த்து வைத்த பணிப்பெண்ணைப் பாராட்டினர்.
அந்த வருடம் குறித்த பணிப்பெண்ணும். தலைமை விமானியும் நிறுவனத்தின் அதியுயர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன் கீழ் வரும் வாசகம் நிறுவனத்தின் அணைத்து அலுவலகங்களுக்கும் ஊழியர்களின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
"மனிதர்கள் அவர்களுக்கு என்ன சொன்னீர்க்கள்
என்பதை மறந்து விடுவார்கள்,
என்ன செய்தீர்கள் என்பதையும் மறந்து விடுவார்கள்,
ஆனால் எவற்றை அவர்களுடைய உள்ளங்களில் பதித்து
விட்டீர்களோ அவற்றை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்''....

ஞாயிறு, ஜனவரி 31, 2016

காஞ்சி காமகோடி மடத்தின் வரலாறு

காஞ்சி காமகோடி மடத்தின் வரலாறு:- 
ஆதிசங்கரபகவத்பாதாள் தனது திக்விஜயத்திற்கு பிறகு,மோக்ஷபுரி என போற்றப்படும், காஞ்சிமாநகரத்தை வந்தடைகிறார்;; அங்கே தனக்கென ஒரு ஆஸ்ரமத்தை அமைத்திக் கொண்டார்;
தனது 32 வயதிற்குள் வியக்க தக்கும் வகையில் சாதனை புரிந்தார்.. அவரின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள்:- பிறந்தது-- கலி வருடம் 2593(கி.மு 509);; சந்நியாசம் மேற்கொண்டது-- கலி 2603(கி.மு 499);; த்வாரகா மடத்தை அமைத்து அதன் தலைவராக ஹஸ்தமாலகரை நியமித்தது-- கலி 2611(கி.மு 491);; சீடர் தோடகாச்சாரியாரை தலைவராகக் கொண்டு ஜோதிஷ் மடத்தை ஸ்தாபித்தார்-- கலி 2616(கி.மு 486);; பத்மபாதரை தலைவராக்கி கோவர்த்தன மடத்தை ஸ்தாபித்தார்-- கலி 2617(கி.மு 485);; சிருங்கேரியில் சீடர் சுரேஸ்வரை தலைவராக்கி சிருங்கேரி மடத்தை ஸ்தாபித்தார் ---கலி 2618(கி.மு 484);;;ஸர்வக்ஞ பீடமென காமகோடி பீடத்தை காஞ்சியில் உருவாக்கினார்--- கலி 2620(கி.மு 482);; ஆதி சங்கரர் காஞ்சியில் முக்தியடைந்தார்--கலி 2625(கி.மு477);; இவர் கைலாசத்திலிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களை கொண்டு வந்தார்;; அவைகள் இப்போதும் கீழ்க்கண்ட இடங்களில் உள்ளன:- முக்தி லிங்கம்--கேதார்நாத்;; வர லிங்கம்--நேபாளம்;; போக லிங்கம்--சிருங்கேரி மடம்;; மோக்ஷ லிங்கம்--சிதம்பரம்;; யோக லிங்கம்--காஞ்சி காமகோடி மடம்;;

1. ஆதி சங்கரபகவத்பாதாள் அவர்களே காஞ்சி மடத்தின் ஸ்தாபகர்;; இங்கு அவர் ஸர்வக்ஞ பீடத்தின் தலைமையை ஏற்றார்.. அங்கு அப்போது வந்திருந்த ப்ரம்மதேசத்தை சேர்ந்த சிறுவனின் மேதாவிலாசத்தைக் கண்டு, அவனை தனது சீடரின்(சுரேஸ்வரரின்) கீழ் பாடம் பயிலச் சொல்லி, பிறகு அவரே சுரேஸ்வரருக்கு, பிறகு பீடம் ஏறினார்;; அவருக்கு ஆதிசங்கரரே "ஸர்வக்ஞாத்மன்" என பெயர் சூட்டினார்;; ஆதிசங்கரர் தனது சிறுவயதிலேயே சந்நியாசம் பூண்டார்;; அதே போல் காஞ்சி மடத்திற்கு அதிபதியாகிறவர்கள் ப்ரம்மசரியத்திலிருந்து நேராக சந்நியாசம் பெறவேண்டும்;; அவர்களின் எல்லோருடைய திருநாமத்துடன் "இந்திர சரஸ்வதி" சேர்க்கப்படும்;;


2 ஸ்ரீ சுரேஸ்வர:- இவர் மஹிஸ்மதியை சேர்ந்தவர்;; மந்தனமிஸ்ரர் என்ற பெயரில் வாதிட்டு தோற்று, ஆதிசங்கரரின் சீடரானார்;; இவர் காஞ்சியில் முக்தி அடைந்தார்--கி.மு 407;;இவர் எழுதிய நூல்கள் வாதிக, நைஷ்கர்ம்ய சித்தி;; இவரின் சிலை காமகோடிபீடத்திலுள்ளது;; தினமும் அவருக்கு பூஜை செய்வர்;; இன்றும் மந்தனமிஸ்ர அக்ரஹாரம் காஞ்சியிலுள்ளது;;
3. ஸ்ரீஸர்வக்ஞாத்மன்:- தாமிரபரணி தீரத்திலிருந்து வந்தவர்;; ஏழு வயதில் சந்நியாசம் பெற்றார்;; ஸ்ரீ சுரேஸ்வரரின் கீழ் பாடம் பயின்றவர்;; இவர் எழுதிய நூல்கள்--ஸர்வக்ஞ விலாசம், சம்க்ஷேப ஸரீரகா;; காஞ்சியில் கி.மு 364ல் முக்தியடைந்தார்;;
4. ஸ்ரீஸத்யபோதேந்திர சரஸ்வதி:- இவர் சேர நாட்டை சேர்ந்தவர்;; இவரும் சங்கரரின் பாஷ்யத்திற்கு உரை எழுதியுள்ளார்;;காஞ்சியில் கி.மு268ல் முக்தியடைந்தார்;;
5. ஸ்ரீஞாநேந்திர சரஸ்வதி:- இவர் எழுதிய நூல் "சந்திரிகா";; காஞ்சியில் கி.மு 205ல் முக்தியடைந்தார்;
6. ஸ்ரீசுத்தானந்தேந்திரசரஸ்வதி:- வேதாரண்யத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.மு 124ல் முக்தியடைந்தார்;;
7. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:- சேரநாட்டை சேர்ந்தவர்;; சங்கர பாஷ்யத்திற்கு உரை எழுதியவர்;; காஞ்சியில் கி.மு 55ல் முக்தியடைந்தார்;;
8. ஸ்ரீகைவல்யானந்த யோகேந்திரசரஸ்வதி:- திருப்பதியை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 28ல் முக்தியடைந்தார்;;
9. ஸ்ரீக்ருபா சங்கரேந்திரசரஸ்வதி:- ஆந்திர நாட்டை சேர்ந்தவர்;;ஆதிசங்கரரின் ஷண்மத
ஸ்தாபனத்தை உறுதிபடுத்தி அதை சீரிய முறையில் மக்களுக்கு அளித்தார்;; பகதி மார்க்கத்தை எளியமுறையில் செய்ய உதவினார்;; விந்திய பர்வதத்தில் கி.பி 69 ல் முக்தியடைந்தார்;;
10. ஸ்ரீசுரேஸ்வரசரஸ்வதி:-- மஹாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 127ல் முக்தியடைந்தார்;;
11. ஸ்ரீசிவானந்த சித்கணேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; விருத்தாசலத்தில் கி.பி 172ல் முக்தியடைந்தார்;;
12. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(I):- பாலாற்றங்கரையிலிருந்து வந்தவர்;; சேஷாசல மலையில் கி.பி 235ல் மறைந்தார்;;
13. ஸ்ரீசத்சித் கணேந்திரசரஸ்வதி:- கடிலம் தீரத்திலிருந்து வந்தவர்;; அவதூதராக வாழ்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 272ல் முக்தியடைந்தார்;;
14. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:- ஆந்திர நாட்டை சேர்ந்தவர்;; உக்ரபைரவரை அடக்கியவர் என்பர்;; அகஸ்திய மலையில் கி.பி 317ல் முக்தியடைந்தார்;;
15. ஸ்ரீகங்காதரேந்திரசரஸ்வதி:- ஆந்திர நாட்டை சேர்ந்தவர்;; அகஸ்தியமலையில் கி.பி 329ல் முக்தியடைந்தார்;;
16. ஸ்ரீஉஜ்வல சங்கரேந்திரசரஸ்வதி:- மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்;; காஷ்மீரம் அருகிலுள்ள காலாபுரியில் கி.பி367ல் முக்தியடைந்தார்;;
17. ஸ்ரீசதாசிவேந்திரசரஸ்வதி:- காஷ்மீரத்தை சேர்ந்தவர்;; நாசிக் அருகிலுள்ள த்ரயம்பகத்தில் கி.பி 375ல் முக்தியடைந்தார்;;
18. ஸ்ரீயோகபிலக சுரேந்திரசரஸ்வதி:- மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்;; உஜ்ஜயினில் கி.பி 385ல் முக்தியடைந்தார்;;
19. ஸ்ரீமார்த்தாண்ட வித்யாகணேந்திரசரஸ்வதி:- கோதவரி தீரத்தில் கி.பி 398ல் முக்தியடைந்தார்;;
20. ஸ்ரீமூக சங்கரேந்திரசரஸ்வதி:- வானசாஸ்திர வல்லுநர்;; காஞ்சிகாமாட்சியின் கடாக்க்ஷத்தால் பேசியவர்;; கோதவரி தீரத்தில் கி.பி 437, முக்தியடைந்தார்;;
21. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(II):- வடகர்நாடகத்தை(கொங்கண்) சேர்ந்தவர்;; காசியில் கி.பி 447ல் முக்தியடைந்தார்;;
22. ஸ்ரீ போதேந்திரசரஸ்வதி:- மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்;; ஜகந்நாதக்ஷேத்ரத்தில் கி.பி 481ல் முக்தியடைந்தார்;;
23. ஸ்ரீசச்சித் சுகேந்திரசரஸ்வதி:- ஆந்திரவிலுள்ள ஸ்ரீகாகுலத்தை சேர்ந்தவர்;; சுப்ரஹமண்ய பக்தர்;; ஜகந்நாதக்ஷேத்ரமருகில் கி.பி 512ல் முக்தியடைந்தார்;;
24. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை(கொங்கண்) சேர்ந்தவர்;; இவர் கொங்கணத்திலேயே வாழ்ந்தார்;;ரத்னகிரியில் கி.பி 527ல் முக்தியடைந்தார்;;
25.ஸ்ரீசச்சிதாநந்த கணேந்திரசரஸ்வதி:- ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர்;; கோகர்ணத்தில் கி.பி 548ல் முக்தியடைந்தார்;;
26. ஸ்ரீப்ரஞான கணேந்திரசரஸ்வதி:- பெண்ணாற்றங்கரையை சேர்ந்த ஊர்; காஞ்சியில் கி.பி 565 ல் முக்தியடைந்தார்;;
27. ஸ்ரீசித் விலாசேந்திரசரஸ்வதி:-ஹஸ்தகிரியை சேர்ந்தவர்(ஆந்திராவிலுள்ளது);; காஞ்சியில் கி.பி 577ல் முக்தியடைந்தார்;
28. ஸ்ரீமஹாதேவ வேலேந்திரசரஸ்வதி:- ஆந்திராவிலுள்ள பத்ராசலத்தை சேர்ந்தவர்;; கி.பி 601, காஞ்சியில் முக்தியடைந்தார்;
29. பூர்ண போதேந்திரசரஸ்வதி:- காஞ்சியில் கி.பி 618ல் முக்தியடைந்தார்;;
30. ஸ்ரீ போதேந்திர சரஸ்வதி:- காஞ்சியில் கி.பி 655ல் முக்தியடைந்தார்;;
31. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:- கடிலம் நதியிலுள்ள கிரமாத்தை சேர்ந்தவர்;; காஷ்மீர மன்னால் போற்றப்பட்டவர்;; காஞ்சியில் கி.பி 668, முக்தியடைந்தார்;;
32. ஸ்ரீசிதாநந்த கணேந்திரசரஸ்வதி:- காய்ந்த சருகுகளை உண்டே வாழ்ந்தவர்;; கி.பி 672ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
33. ஸ்ரீ சச்சிதாநந்தேந்திரசரஸ்வதி:- ஆந்திராவை சேர்ந்தவர்;; கி.பி 692ல் முக்தியடைந்தார்;;
34. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி(III):- வேகவதி நதிக்கரையிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 710ல் முக்தியடைந்தார்;;
35. ஸ்ரீசித் சுகேந்திரசரஸ்வதி:- வேதாசலத்தை சேர்ந்தவர்;; சஹ்யமலையில் கி.பி 737ல் முக்தியடைந்தார்;;
36. ஸ்ரீசித் சுகாநந்தேந்திரசரஸ்வதி:- பாலாற்றங்கரையை சேர்ந்த கிராமம்;; கி.பி 758ல் கஞ்சியில் முக்தியடைந்தார்;;
37. ஸ்ரீவித்யா கணேந்திரசரஸ்வதி:- சிதம்பரத்தில் கி.பி 795ல் முக்தியடைந்தார்;;
38. ஸ்ரீஅபிநவ சங்கரேந்திரசரஸ்வதி:- சிதம்பரத்தை சேர்ந்தவர்;; எல்லோராலும் போற்றப்பட்டவர்;; தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர்;; காஷ்மீரநாட்டில் பீடமேறியவர் ;; கி.பி 840ல் இமாலயத்தில்(ஆத்ரேய மலையில்)முக்தியடைந்தார்;;
39. ஸ்ரீ சத்சித் விலாசேந்திரசரஸ்வதி:-கி.பி 873ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
40. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; கி.பி 915ல் முக்தியடைந்தார்;;
41. ஸ்ரீ கங்காதரேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; கி.பி 950ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
42. ஸ்ரீ ப்ரம்மாநந்த கணேந்திரசரஸ்வதி:- கி.பி 978ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
43. ஸ்ரீஆனந்த கணேந்திரசரஸ்வதி:- துங்கபத்திரா தீரத்தை சேர்ந்தவர்;; காஞ்சியில் கி.பி 1014ல் முக்தியடைந்தார்;;
44. ஸ்ரீபூர்ண போதேந்திரசரஸ்வதி:- கர்நாடகத்தை சேர்ந்தவர்;; கி.பி 1040. காஞ்சியில் முக்தியடைந்தார்;
45. ஸ்ரீபரம சிவேந்திரசரஸ்வதி:- காஞ்சியில் கி.பி 1061ல் முக்தியடைந்தார்;;
46ஸ்ரீசந்திரானந்த போதேந்திரஸ்ரஸ்வதி:- கதாசரித சாகரத்தை எழுதியவர்;; கி.பி 1098ல் அருணாசலக்ஷேத்ரத்தில் முக்தியடைந்தார்
47. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(IV):- மிகவும் போற்றப்பட்டவர்; அருணாசல க்ஷேத்திரத்தில் கி.பி 1166ல் முக்தியடைந்தார்;;
48. ஸ்ரீஅத்வைதாநந்த போதேந்திரசரஸ்வதி:- பெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர்;; கி.பி 1200ல் சிதம்பரத்தில் முக்தியடைந்தார்;;
49. ஸ்ரீமஹா தேவேந்திரசரஸ்வதி:- தஞ்சாவூரை சேர்ந்தவர்;; கடில தீரத்தில் கி.பி 1247ல் முக்தியடைந்தார்;;
50. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:- இவரும் கடில நதிதீரத்தில் கி.பி 1297ல் முக்தியடைந்தார்;;
51. ஸ்ரீவித்யா தீர்த்தேந்திரசரஸ்வதி:- பில்வாரண்யத்தை சேர்ந்தவர்; கி.பி 1385ல் இமாலயத்தில் முக்தியடைந்தார்;;
52. ஸ்ரீ சங்கராநந்தேந்திரசரஸ்வதி:- திருவடைமருதூரை சேர்ந்தவர்;; கி.பி 1417ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
53. ஸ்ரீபூர்ணாநந்த சதாசிவேந்திரசரஸ்வதி:-நாகாரண்யத்தை சேர்ந்தவர்;; கி.பி 1498ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
54. ஸ்ரீவ்யாசாசல மஹாதேவேந்திரசரஸ்வதி:- காஞ்சியை சேர்ந்தவர்;; கி.பி 1507ல் வ்யாசாசலத்தில் முக்தியடைந்தார்;;
55. ஸ்ரீசந்திர சூடேந்திரசரஸ்வதி:- தென்னாற்காடு மாவட்டைத்தை சேர்ந்தவர்;; கி.பி 1524ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
56. ஸ்ரீசர்வக்ஞ சதாசிவபோதேந்திரசரஸ்வதி:- வடபெண்ணாற்றங்கரையை சேர்ந்தவர்;; கி.பி 1539ல் ராமேஸ்வரத்தில் முக்தியடைந்தார்;;
57. ஸ்ரீ பரமசிவேந்திரசரஸ்வதி:- பம்பாதீரத்தை சேர்ந்தவர்;; மஹான் சதாசிவப்ரம்மேந்திராளின் குரு;; கி.பி 1586ல் திருவெண்காட்டில் முக்தியடைந்தார்;;
58. ஸ்ரீஆத்ம போதேந்திரசரஸ்வதி:- விருத்தாசலத்தை சேர்ந்தவர்;;இவர் சதாசிவப்ரம்மேந்திராளை குருரத்னமாலிகாவை எழுத சொன்னவர்;; கி.பி 1638ல் தென்பெண்ணாற்றங்கரையில் முக்தியடைந்தார்;;
59. ஸ்ரீபகவன்நாம போதேந்திரசரஸ்வதி:- காஞ்சியை சேர்ந்தவர்;; நாமசங்கீர்த்தனத்தின் மகிமையை எடுத்துரைத்தவர்; கி.பி 1692ல் கோவிந்தபுரத்தில்(கும்பகோணமருகில்) முக்தியடைந்தார்;;
60. ஸ்ரீஅத்வைதாத்ம ப்ராகசேந்திரசரஸ்வதி:- கி.பி 1704ல் காஞ்சியில் முக்தியடைந்தார்;;
61. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- கி.பி 1746ல் திருவொற்றியூரில் முக்தியடைந்தார்;;
62. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(V):- இவர் காலத்தில் தான் போரினால். மடத்தை கும்பகோணத்திற்கு மாற்றப்பட்டது;; கி.பி 1783ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;;
63. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- கும்பகோணத்தை சேர்ந்தவர்;; கி.பி 1813; கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;
64. ஸ்ரீ சந்திரசேகரேந்திரசரஸ்வதி(VI):- இவர் கோவிந்த தீக்ஷதர் வம்சத்தை சேர்ந்தவர்;; கி.பி 1851ல் கும்பகோணத்தில் முக்தியடைந்தார்;;
65. ஸ்ரீசுதர்சன மஹாதேவேந்திரசரஸ்வதி:- திருவடைமருதூரை சேர்ந்தவர்;; கி.பி 1891ல் இளையாத்தங்குடியில் முக்தியடைந்தார்;;
66. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி(VII):- உடையம்பாக்கத்தை சேர்ந்தவர்;; கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்;;
67. ஸ்ரீமஹாதேவேந்திரசரஸ்வதி:- ஏழுநாட்களே பீடத்தில் இருந்தார்;; கி.பி 1907ல் கலவையில் முக்தியடைந்தார்;;
68. ஸ்ரீசந்திரசேகரேந்திரசரஸ்வதி.---மஹா பெரியவா
69. ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி
70. ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி


சந்திரஹாசம்

சந்திரஹாசம்-----
ராவணனுக்கு சிவனால் கொடுக்கப்பட்ட வாள். ப்ரம்மாவிடம் பல வரங்கள் பெற்று வரும் வழியில் கைலாசத்தை தூக்க முயற்சிக்க, சிவன் அழுத்த, அவன் ஆயிரம் ஆண்டுகள், சிவ நாமம் சொல்ல அவர் மகிழ்ந்து, இந்த வாளைக் கொடுத்தார். (உத்திர ராம).
ஆனால்சந்திரஹாசன் என்ற பெயரில் ஒருவன் இருந்தான் தெரியுமா? 
சந்திரஹாஸன்;-----சுதார்மிகன் என்பவருக்கு இவன் பிறந்தான் . இவன் பிறக்கும் போது கையில் ஆறு விரல்கள் இருந்தன .இது கெடுதல் என்று நாட்டு மக்கள் கூற இவன் தாய் தந்தையரைக் கொன்று, இவனைத் தூக்கி எறிந்தனர்.
பிறகு கௌண்டல நாட்டில் வசித்து வந்தான் . ஒரு நாள் அந்நாட்டு மந்திரி ( த்ரிஷ்டபுத்தி)யின் வீட்டில் ஒரு விருந்து நடக்க அங்கே இச்சிறுவனை கண்ட, சில முனிவர்கள் அவன் பிற்காலத்தில் அரசனாவான் எனக் கூற, இதை அறிந்த மந்திரி பணி ஆட்களிடம் இவனைக் கொல்வதற்கு ஆணையிட , அவர்கள் சந்திரஹாஸனின் ஆறாவது விரலை வெட்டி , விரட்டி விட்டனர்.
அவன் கலிந்த நாட்டை அடைந்தான். அந்நாட்டரசன் இவனின் மேதாவிலாசம் கண்டு, தன்னிடமே வைத்துக் கொண்டு,கல்வி கேள்விகளில் தேர்ந்த பின் அவனை அரசனாக்கினான். இதை அறிந்த த்ருஷ்டபுத்தி கலிந்த நாடு வந்து,இவனை தன் நாட்டரசனைச் சென்று பார்க்குமாறு கூற,அவனும் அதற்கு இசைந்தான். மந்திரி தன் மகனுக்கு (மதனா) ஒரு கடிதம் கொடுத்து இவனை க் கொல்லுமாறு எழுதியிருந்தான்.
ஆனால் வழியில் கௌண்டல நாட்டு இளவரசி சம்பகமாலினியும், த்ருஷ்டபுத்தியின் மகள் விசயாவும் இவனை காதலிக்க, அவர்கள் இவன் கொண்டு வந்த கடிதத்தை பார்க்க நேரிட்டது . பின் , கலங்கி,அதிலிருந்த"விஷம் கொடு" என்பதை மாற்றி"விசயாவை கொடு" என எழுதினர். அவ்வாறே மதனாவும் விசயாவைத் திருமணம் செய்து கொடுக்க, கௌண்டல நாட்டரசனும் தன் பெண் சம்பகமாலினியைக் கொடுத்தான்.
பிறகு த்ருஷ்டபுத்தி சந்திரஹாஸனைக் கொல்வடதற்கு வேறு திட்டமிட்டு , அதை வேறு விதமாகப் புரிந்துகொண்டு மந்திரி மகன் மதனாவைக் கொன்றனர். பிறகு தருமரின் அஸ்வமேதக் குதிரையை நிறுத்த, அர்ச்சுனனுடன் போரிட்டு விரட்ட, கிருஷ்ணன் வந்து சமாதானம் செய்தார். இவனுக்கு மகராக்ஷன், பத்மாக்ஷ்ன் என இரண்டு மகன்கள் இருந்தனர்.(ஜைமினி அஸ்வமேத பர்வ);;

நான்கு உபாயங்கள்--

அரசர்கள் தங்கள் ஆட்சியில் கையாண்ட நான்கு உபாயங்கள்--
சாம, தான, பேத, தண்டம்;; 
1)சாம-- நல்ல வார்த்தைகளால் இன்முகத்துடன் வரவேற்றல், நல்ல உபசரணை செய்து தன் வயப்படுத்துதல்,
2) தான- -ஐந்து வகைகள் --ப்ரீதிதான, த்ரவிய தான, ஸ்வயம்க்ராஹ, தேய, ப்ரதிமோஹ;; பல தரப்பட்ட மக்களை கவர் இந்த தான முறைகள் உதவும்.
3) பேத;; நண்பர்களை சூழ்ச்சி செய்து பிரித்தல், இரு தரப்புகளுக்கிடையே பகைமையை உருவாக்கிப் பிரித்தல். சந்தேகங்களை உருவாக்கிப் பிரித்தல், நல்ல நண்பர்களைப் பிரித்துத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளுதல்;
4) தண்ட--கொல்லுதல், செல்வத்தை அழித்தல், சித்ரவதை செய்து உடம்பின் உறுப்புகளை வெட்டுதல்;; கெட்ட நண்பர்கள், மந்திரிகள், சூழ்ச்சி செய்யும் அரசர்கள், விரோதிகளை இம்முறையில் அழிக்கவேண்டும்.
இதைத் தவிர,சில மாயா உபாயங்களும் உண்டு. மந்திர தந்திர சக்தியால் உருமாறுதல், மழை, நெருப்பு, மேகமூட்டம், இருட்டு உண்டாக்குதல் செய்து எதிரிகளை பயமுறுத்துதல்என்பன . இந்த இந்திர ஜாலங்களை சூரபதுமன் போன்ற அசுரர்கள் அறிவர்.